Wednesday, September 18, 2013

கொள்ளை போகவிட்ட நேரம்

அதிக காலத்திற்கு எழுதாமல் விட்டிருந்தது ஏகபோகமாக வருத்தம் தந்தது. 4 வருடத்திற்கு முன்பு எழுதிய பதிவு, புண்ணியமாய் போன கூகிளினால் இன்னும் வெள்ளை கருப்பில் அப்படியே இருக்கிறது. 4 வருடத்தில் நிறைய மாற்றங்கள். வந்துதானே ஆக வேண்டும்.

காதல், திருமணம், பிள்ளை, இடமாற்றம், பல மனமாற்றம், விட்டு போனவை சில கிடைத்தது, கிடைத்தவை சில விட்டு போனது. படிக்க நிறைய ஆசைப்பட்டு, ஆசையோடே நிறுத்தினேன். எழுத முனைந்தால், நல்ல எழுத்துக்களும் நல்ல தமிழுக்கும் கலப்படம் உண்டாவதை, வேண்டாம், என நானே சொல்லிகொண்டேன்.

இனியாவது எழுத வேண்டும். எழுத்தும் மவுனமும் கூட சேர கிடைத்தால், கலப்படம் குறையும்.

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...