எங்களின் பல நூற்றாண்டு வாழ்க்கையும், வான்வெளி பயணத்தின் வளர்ச்சியும், பருவ மாற்றங்களும் எங்களை அடுத்த பக்கத்து கிரகங்களை வாழ்வதற்காக பார்க்க வைத்தது. அதன் பலன், எங்கள் ஜீவன்களில் இரண்டு பேர், சுரியனுக்கு மூன்றாவது இடத்தில், எங்களுக்கு பக்கத்தில் இருக்கும் கிரகத்தில் (பால்வெளியில் உயிரினம் வாழ, எங்கள் கிரகத்திற்கு அடுத்து தகுதியான இரண்டாவது கிரகம் அது) கொண்டு போய் விடபட்டுள்ளார்கள்.
Thursday, January 03, 2008
ஆதி
எங்களின் பல நூற்றாண்டு வாழ்க்கையும், வான்வெளி பயணத்தின் வளர்ச்சியும், பருவ மாற்றங்களும் எங்களை அடுத்த பக்கத்து கிரகங்களை வாழ்வதற்காக பார்க்க வைத்தது. அதன் பலன், எங்கள் ஜீவன்களில் இரண்டு பேர், சுரியனுக்கு மூன்றாவது இடத்தில், எங்களுக்கு பக்கத்தில் இருக்கும் கிரகத்தில் (பால்வெளியில் உயிரினம் வாழ, எங்கள் கிரகத்திற்கு அடுத்து தகுதியான இரண்டாவது கிரகம் அது) கொண்டு போய் விடபட்டுள்ளார்கள்.
Tuesday, December 25, 2007
சில உலக சினிமா
Pursuit of Happyness - உண்மை தழுவிய கதை. Hollywood'ன் success formula இது. Will Smith தயாரித்தது மற்றும் நடித்தது. நமக்கு பழகிய இந்திய மத்தியதர வாழ்க்கை. ஆனால் கதை நடப்பது San Francisco. அவ்வளவே தான் வித்தியாசம். Spider Man, Harry Potter எல்லாம் தமிழ் பேசினார்கள், நம் நாட்டில். இந்த படத்தை தமிழ் செய்து வெளியிட்டார்களா என தெரியவில்லை. செய்திருப்பதற்கு வாய்ப்பு குறைவு. சராசரி சினிமா ரசிகனுக்கு தெரிந்த Hollywood படங்களில் இருந்து இது பல காணி தூரம் தள்ளியே இருக்கிறது. பல தரப்பில் ரசிக்கபட்ட ஒரு படம் இது.
Babel - கொஞ்சமாய் என்னை திக்குதிக்கென ஆக்கிய படம். இது முதலில் Horror படமில்லை. ஆனால் பயமுறுத்துகிறது. சாதாரண வாழ்க்கையின் அசாதாரண பயங்கள் தான். பிரமாண்டமாய் யோசிக்காமல், எளிமையான script. ஆனால் நிகழ்வுகள் அழுத்தமானவை. தனி தனி கதைகளாய் சொல்லபட்டு வருபவற்றை, கொஞ்சம் கொஞ்சமாய் முடிச்சு போட்டு ஒரே கதை தான் என தெளிவாக்கபடும் ஒரு திரைப்படம்.
L.A. Confidential & The Departed - இரண்டுமே ஒரு வகையில் ஒரு மாதிரி. தங்களுக்குள் (police/gangster groups) தங்களுக்கு தெரியாமல் புகுத்தபட்ட விஷயத்தை கண்டுபிடிப்பது தான். குருதிபுனல், காக்கிசட்டை, போக்கிரி எல்லாம் எனக்கு ஞாபகம் வந்தது. நல்ல பர பர திரைக்கதை. Dinner சாப்பிட்டுகொண்டே பார்க்க சரியான படங்கள்.
Bicycle Thief - இது ஒரு பழைய இத்தாலிய திரைப்படம். கடைசி நிமிஷ பன்ச் தான் திரைப்படம். அந்த பன்ச் அழுத்தமானதாய் இருக்க மீதி காட்சிகள். நல்ல வேளையாக போர் அடிக்கும் நிலை வரும் சரியான நேரத்தில் படத்தை முடித்துவிடுகிறார்கள். ஆனால், கடைசி பன்ச் நிஜமாகவே அசத்தல். ஒரு சைக்கிளுக்கு அவ்வளவு மரியாதை அந்த காலத்தில் (1948).
Apocalypto - Mel Gibson'ன் The passion of the Christ பார்த்து தியேட்டரில் ஒரு பெண்மணி கேவிகேவி அழுதது தான் எனக்கு நியாபகம் வந்தது. Apocalypto, Mel Gibson'ன் இரண்டாவது இயக்க முயற்சி. அசாத்திய முயற்சி. Mayan நாகரீகம் தான் கதைக்களம் மற்றும் அந்த மக்கள் தான் கதையில் இருக்கிறார்கள். கொஞ்சமாய் பல தமிழ் பட கதைகளில் வரும் விஷயம் தான். அப்பாவி ஹீரோ, கடைசியில் வில்லனை ரவுண்ட் கட்டி அடிக்கும் மசாலா கதை. ஆனால் இதன் பிரமாண்டம் ஆச்சரியம். இங்கே பிரமாண்டம் graphics அல்லது set கிடையாது. நம் கண் முன் விரியும் Mayan மக்களின் வாழ்க்கை.
Walk the line - ஒரு biography வழி கதை. The beautiful mind, Pursuit of Happyness எல்லாம் இந்த வகையறா. இங்கே Johnny Cash என்பவரின் இசை வாழ்க்கை. பார்க்க பார்க்க எனக்கு முன் சிந்து பைரவி தான் ஓடியது. அச்சு அசல் அப்படியே எல்லாம் சொல்ல முடியாது. ஆனால் இரண்டிருக்கும் பெரும்பாலும் நிறைய ஒற்றுமை. வாழ்ந்து, கெட்டு மறுபடியும் வாழ்ந்து விட்ட ஒரு இசைஞனின் வாழ்க்கை அழகாக நெய்யபட்ட படம். படத்தின் கதாநாயகி Reese Witherspoon கொள்ளை அழகு. அவருக்காகவே அவரின் Legally Blonde (2001) அடுத்து subscribe செய்து விட்டேன். முடிந்தவரை ஜொள்ளிகொள்ளத்தான்.
இதெல்லாம் இல்லாமல், சனி ஞாயிறெல்லாம் தியேட்டரில் பார்த்த படங்கள் தனி கணக்கு. முடிந்த்தால் அதையும் எழுத ஒரு எண்ணம்.
Monday, December 24, 2007
2008 முடிவில்...
Thursday, November 01, 2007
கமல் கவியரங்கம்
தலைப்பில் கமல். அப்போது இவர் தான் நடுவரா? தசாவதாரத்தில் விட்டுவிட்ட அவதாரத்தை இங்கே அரங்கேற்றுகிறாரா (கிட்டதட்ட 200 கவிதைகள் எழுதி இருப்பதாக யாரோ எப்போதோ சொன்ன நியாபகம். விகடனில் இவர் எழுதிய கவிதைகள் எப்போதும் சூப்பர் ரகத்திலேயே எனக்கு பட்டது).
Vijay Tv - கவியரங்கம் பார்க்க மக்கள் வருகிறார்களோ இல்லையோ, தசாவதார மேக்கப் இல்லாத கமலை பார்க்க கன ஜோராக கூட்டம் கூடும்.
Tuesday, October 23, 2007
வலயபட்டி தவிலே தவிலே
நீ நெருங்கும் போதே
கரண்ட் ஏறுதே
உங்க ஊரு
கல்பாக்கமா?
நரம்பெல்லாம்
முறுக்கேறுதே
ஏண்டி நீயும்
மணப்பாறையா?
...
எல்லா புகழும் - முதல் பாடலை ரஹ்மான் பாடியிருக்கிறார். திப்புவோ, ஷங்கர் மஹாதேவனோ பாடியிருந்தால் தேவலாமோ என தோன்றியது. பாடல் நன்றாக இருந்தாலும், ரஹ்மான் குரல் விஜய்க்கு சரியாகுமா என தெரியவில்லை (தலைவருக்கு சரியாகியதே என்றால் - அதுவும் இல்லையென்பது என் கருத்து). பாடலாக அது கலக்கல். ஆனால், விஜய்யின் முதல் பாடலாக, ரஹ்மானின் குரல், கொஞ்சம் இடிக்கிறது.
மற்றபடி, மிச்ச சொச்ச பாடல்களை அடிக்கடி கேட்டு பிடிக்க வைத்து கொள்ள வேண்டும் என முடிவு செய்துள்ளேன்.
சொல்ல வேண்டிய விஷயம் - இந்த படத்தில் ஷ்ரேயாவின் ரேட்டிங் எகிற போவதில் விஜய்க்கே சந்தேகம் இருக்காது.
Sunday, October 14, 2007
ஆல்பிரட் நோபல்
டைனமைட் போன்ற குட்டிசாத்தானை உலகத்திற்கு பிரசவித்து விட்டு, நல்லது செய்யும் என கற்பனை கண்டுவிட்டார் இந்த அறிவியல்வாதி. இவர் இருந்த காலம் (1833 - 1896), அறிவியலை மக்கள் அரியணையில் வைத்து பார்த்து கொண்டிருந்த நேரம். எதை கண்டுபிடித்தாலும் அது பரபரவென பற்றி கொண்டிருந்தது. இவரின் அப்பாவும் அறிவியல்வாதி. குடும்ப தர்மத்தின்படி அதே படியில் பயணித்துவிட்டார். நைட்ரோகிளிசரினின் வேதியியல் மாற்றத்தை, வெடி மாற்றமாக பூலோகத்திற்கு அறிமுகபடுத்தியது 1867. அன்றிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஆயுத கலாச்சாரம் நாடுகளின் நாகரீகமாகி போனது. இரண்டு உலக போருமே இதற்கு பிறகு நிகழ்ந்தது தான். கை துப்பாக்கியை வைத்து எத்தனை பேரை சுட்டு விட முடியும். டைனமைட் போன்ற வஸ்த்துக்கள், அதன் பரிணாம வளர்ச்சி பெற்ற அதன் அண்ணன்கள், உலக போரை முடிந்த வரை வளர்த்து விட்டார்கள்.
நோபலின் கடைசி காலம், அவ்வளவாக திருப்தியாக இருந்திருக்க வாய்ப்பில்லை. தன் சொத்து பத்து பதினொன்றை எல்லாம் தன் பெயரிட்ட பரிசுக்காக நேர்ந்து விட்டதில் இருந்தே அது தெரிந்திருக்கும். அவர் விட்டு சென்ற போது 4,223,500 USD என்று விக்கிபீடியா கணக்கு சொல்கிறது. அப்துல் கலாமிடம் எவ்வளவு சொத்திருக்கிறது என்று கணக்கு கேட்டால், அவரே, 'காமெடி பண்ணாதீங்க' என்று ஹாஸ்யம் செய்வார்.
அந்த காலத்தில் எத்தனை பேர் நோபலை எள்ளி நகையாடினார்களோ தெரியவில்லை. பெரிதாய் பாதிக்கபட்டு தானபிரபு ஆகிவிட்டார். இப்போது நோபலை பெற பெரும் போராட்டம். பல சமயங்களில் இவர்கள் பரிசை அறிவிக்கும் போது, சில பல இணை துணை அறிவியல்வாதிகள், எலக்கியவாதிகள், அமைதிவாதிகளுக்கு (எளிதாக - பரிசு கிடைக்காதவர்களுக்கு) டாப் டூ பாட்டம் எரிவதாய் மீடியா எழுதி தள்ளுகிறது. எத்தனை எத்தனை அரசியலோ?
2007. நோபல் பரிசில் அல் கோர் அமைதிக்கான பரிசை அலேக்காக அள்ளி விட்டார். கூடவே IPCC (Intergovermental Panel on Climate Change) என்ற அமைப்பும். அவர்களும், அல் கோரும் ஒரே நேர் கோட்டில், பூமி பந்தை பச்சை பந்தாக மாற்ற கூவி கூத்தாடி கொண்டிருக்கிறார்கள். IPCC சேர்மேன் ஒரு இந்தியர் போல. ராஜேந்திர பச்சொரி. பச்சை வெஜிடேரியனாம். இதுவும் விக்கிபீடியா உபயம். இந்தியன் ஆயிலில் சில காலம் பழம் தின்று கொட்டை போட்டிருக்கிறார். இந்த நோபல் பரிசுக்கான அந்தஸ்த்தை தன் விஞ்சானிகளுக்கு அர்ப்பணம் செய்திருக்கிறார்.
மற்றபடி, இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் மருத்துவம் பெரிதாய் ஈர்க்கவில்லை. அதை ஏதாவது இந்தியர் வாங்கியிருந்தால், வெடி வெடித்து கொண்டாடி, 'ஆமாம், யாரு இவங்க' என்று வெடியின் புகை அடங்கியபின் கேட்டிருப்போம். 15 வருடம் கழித்து புத்தகத்தில் பதித்து, நம் சந்ததிகள் மாங்கு மாங்கென, புத்தகத்தில் தலை மோதி மனபாடம் செய்திருப்பார்கள்.
Monday, October 01, 2007
ஜூன் போனால்...
3 வாரம் இந்தியா பார்க்க போயிருந்தேன். சக் தே வெற்றி பெற்று, ஹாக்கி அணி ஆசியா கோப்பை வெற்றி பெற்று, ஜெய் ஹிந்த் மாறி சக் தே இந்தியா சொல்ல ஆரம்பித்திருந்தார்கள். திரும்ப வரும் போது தோனி, கையில்லா பனியனுடன் உலக கோப்பை வாங்கி இன்னமும் இந்தியா என்ற ஜுரத்தை தன் பங்குக்கு ஏற்றி விட்டிருந்தார். எப்படியோ, அடிக்கடி இப்படி செய்து புண்ணியம் கட்டி கொள்கிறார்கள். பின்னாலிருக்கும் விளம்பர உலகம் படு ஜோராக இயங்கி கொண்டிருக்கும்.
3 வாரத்தில் பெரிதாக சுற்றவில்லை. வீட்டு மாடியை கூட ஏறி பார்க்காமல் சுறுசுறுப்பாக தூங்கி வழிந்தது தான் அதிகம். கிடைத்த கேப்பில், கண்ணுக்கு காண கிடைத்த இந்தியாவை பார்த்த போது, மாற்றம் கொள்ளாமல் அப்படியே இருந்த உணர்வு. அதே 'ரியல்ல்லி' பெண்கள், 'வாடா மச்சான்'கள், 'இன்னாபா' ஆட்டோகாரர்கள், 'வடாம் போடல்லியோ' மாமிகள், 'கேது நீச்சத்துல இருக்கான்' ஜோசியர்கள், 'உங்க வூட்டுகாரர் வரலியா' கோவில் கடைகார அம்மாக்கள், 'பிளீஸ் சார்' டிகிரி வாங்கி வியர்வை வழிந்து லோன் விற்கும் ரெப்கள், 'சார், கிங்ஸ் வாங்கலியா இன்னிக்கு?' பொட்டி கடைகாரர்கள், 'முன்னாடி போய்யா' கண்டக்டர்கள், 'பின்னாடி போய்யா' டிரைவர்கள், 'நாளைக்கு ஜெயந்தி மிஸ் லீவ், ஹைய்யா ஜாலி' பையன்கள், 'நான் கேட்கிறேன்' அரசியல்வாதிகள், 'நடிக்க வரலேன்னா படிக்க போயிருப்பேன்' நடிகமணிகள், 'இது ஒரு வித்தியாசமான படம்' டைரக்டர்கள், 'இடிக்கிறான் பாரு எருமையாட்டம்' ரங்கநாதன் தெரு திருமதிகள், 'வேலையே குடுக்குறதில்ல' டீம் மெம்பர்கள், 'வேலையே செய்யுறதில்ல' டீம் லீடர்கள், 'ஆணை இடு தலீவா' தொண்டர்கள்... இப்படி மனிதர்கள் அப்படியே, அழகாய், அவர்களாய்.
கலாம், போதும்பா சொல்லி விட்டார். பழைய பட்டிக்கு வந்து விட்டார். அவர் கண்ட கனவு பலித்ததா, தெரியவில்லை. ஆனால், நிறைய பிரயத்தனபடுகிறார்கள், நனவாக்கி விட. 2020 கஷ்டம் தான். ஆனால் கண்டிப்பாக ஏதோ ஒரு வருடம். 40 ($ vs Rupya) கிட்டதட்ட 20க்கு வந்தாலே, பாதி வல்லரசு.
அமெரிக்காவில் தொண்டை கிழிய Go green கோஷம் போடுகிறார்கள். நம் ஊரில் ஒரு கோடு கூட கிழிக்கவில்லை (அல்லது எனக்கு தெரியவில்லை). சீக்கிரம் பச்சை போடும் அளவுக்கு நம் இந்திய நிலைமை இல்லை. ஆனால் அப்படி ஆவதற்கு, நிறைய வருடங்களும் இல்லை.
இந்தியாவில் இருந்து திரும்பியாகி விட்டது. ஏதோ, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் பார்த்து பார்த்து ஏர் ஹோஸ்டஸ் தேர்ந்தெடுத்திருந்ததால், இந்திய பிரிவு பெரிதாய் பாதிக்கவில்லை.
Tuesday, August 14, 2007
மோகம்
பள்ளும் பாடி
விட்டோம்
வெள்ளையனை வெளியேற்றியும்
விட்டோம்
பிறப்புரிமையை அடைந்தும்
விட்டோம்
60 ஆண்டுகள் சுதந்திரமாய் வாழ்ந்தும்
விட்டோம்
கடைசியில் தாய் மண்ணையும்
விட்டு விட்டோம் !
இன்னமும் கொஞ்ச நாளில் யாருமே இல்லாத நாட்டில் யாருக்கு சுதந்திரம் என்ற கேள்வி வராமல் இருந்தால் சரி.
Monday, August 06, 2007
Gandhi my father
வழக்கம் போல இதற்கும் நெருக்கடி குடுத்து சிலர் பிரபலம் ஆகிவிட்டார்கள் போல.
படம் பார்க்க போன தியேட்டரில் மயான அமைதி. யாராவது சதிதிட்டம் தீட்ட அந்த இடம் ரொம்பவும் வசதியாக இருந்திருக்கும். திரும்ப திரும்ப எண்ணியும் தலை கணக்கு 15க்கு மேல் தாண்ட மாட்டேன் என்றது.
காந்தி - பல பேரால் வெறுக்கபட்ட ஒரு பிரபலம். ஒரு தடவை என் தோழியிடம் காந்தி எனக்கு பிடிக்கும் என சொல்லி, அவள் மிகவும் டென்ஷன் ஆகி, பிறகு ரோஸ் எல்லாம் குடுத்து சமாதானபடுத்தினேன். எல்லா பெரிய மனுஷர்களும் வெளி வாழ்க்கையை வெளிச்சம் போட்டு காட்டி, வீட்டு கதவின் உள்ளே வாழும் வாழ்க்கையை முடிந்தவரை சதாமின் சுரங்க வாழ்க்கை போலத்தான் வாழ்ந்திருக்கிறார்கள். அதனால் தான் பலருக்கு (முக்கியமாக பத்திரிக்கையாள மக்கா) பிரபலங்களின் வீட்டு ஹால் வரை நடந்து அவர்களின் தினசரி உட்கார்தல், நடத்தலை பார்க்க ரகசிய ஆர்வமுண்டு.
அப்படி காந்தியின் வாழ்க்கையை எட்டிபார்த்த படம். சே சே, இல்லீங்க. அவருக்கு ஹரிலால் என்றொறு மகன் இருந்தானா என கேட்கும் அளவிற்கு போன அந்த தவமாய் தவமிருந்து பிள்ளையை எட்டி பார்த்த கதை இது.
சவுத் ஆப்ரிக்காவில் தொடங்கி, எங்கோ மூலையில் யாரும் கவனிக்காத ஒரு தெரு மூலையில் படம் dissolve ஆகிறது. படம் முடிந்தவுடன், உட்கார்ந்திருந்த 15 பேரும், எழுந்திருக்க பல நிமிடங்கள் ஆனது. இதில், கிண்டல் செய்வதற்காகவே வந்திருந்த ஒரு சிறு நண்பர்கள் கூட்டமும்.
Dhoom எடுத்த அதே பாலிவுட் மக்கள் தான் தைரியமாக, பைசா வராது என்று தெரிந்திருந்தும், இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள். அனில் கபூரின் முதல் தயாரிப்பாம். ரொம்ப தில் அதிகம் தாங்க உங்களுக்கு.
அப்பா-மகன், ஒரு தீராத சரஸ்வதி நதி பிரச்சினை (இருக்கும் என்று தெரியும், எங்கிருக்கிறது என்றால் திரு திரு முழி முழி தான்). அப்பா, கொள்ளை ஆசை வைத்திருந்தாலும் மகனிடம் கொட்டிவிட மாட்டார். மகன், அன்புக்கு ஏங்கி ஏங்கியே பாதை ஒதுங்கி, வாழ்க்கை வீணாக்கி, பொத்தாம் பொதுவாகி விடுவார். அப்பா, செய்ய வேண்டியதை செய்யவில்லையே என கடைசியில் வருந்தி, நாலு பேரின் தோள்களில் நின்று போன இதயத்துடன் கடைசி பயணம் போவார். நிஜத்திலும் இது போல நிறைய. காந்தி-ஹரிலாலும் கடைசியில் மனிதர்கள் தான். அதே பிரச்சினை தான். ஆனால், கொழுந்து விட்டு எரியவில்லை. வேறு மாதிரி சொல்லவேண்டுமென்றால், அதை விட கொழுந்து விட்டெறிய பல பிரச்சினைகள் இவர்களின் முன் இருந்தது. அப்போதைய மக்களுக்கு அது பெரிசாக படவில்லை. இப்போது, காந்தி பாலிவுட்டின் கெஸ்ட் கதாபாத்திரம். அடிக்கடி சக்ஸஸ் பார்முலாவாக இருக்கிறார். சரி எடுத்துடலாம்பா என எடுத்துவிட்டார்கள்.
சரித்திரம் குறைத்து, குடும்பம் குழைத்து காந்தி காதை சொன்னது நன்றாகவே இருந்தது. யாரோ ஒரு டீ கடைகாரர், என்னோட பாபூ இறந்துட்டாரு. இனிமே நான் அனாதை. எனக்கு நீ தர காசு வேண்டாம் என அவரின் மகனிடமே சொல்வது. மகன், கிட்டத்தட்ட பிச்சைகாரனாகி விட்ட நிலைமையில், நான் தான் அவரின் மகன் என சொல்லகூட திராணி இல்லாமல் ஹரிலால் திரும்பி நடப்பது என கடைசியில் கொஞ்சம் நெஞ்சம் கணம் தான். மகாத்மாவின் மகனென்று தெரியாமலேயே உயிர்விட்டு, கடைசியில் நினைத்ததை சாதித்துவிட்டாரா இல்லை தோற்றுவிட்டாரா ஹரிலால் என பெரிதாக தீர்ப்பு எல்லாம் சொல்லவில்லை. இது நடந்தது. தெரிந்து கொள்ளுங்கள் என ஒரு நல்ல brave attempt இந்த படம்.
அடித்து சொல்லலாம், இந்த படம் கண்டிப்பாக ஓடாது. ஓடாமல் இருக்க வைக்க, கலர் கலராக பல படங்கள் லைன் கட்டி நிற்கின்றன. அலுவலகத்தில் ஒரு விஷயம் நடக்கும். எதாச்சும் சிறிய விஷயமாக இருந்தால் கூட, ஒரு மெயில் அனுப்பிடுப்பா. அட்லீஸ்ட், மெஸேஜ் பாஸ் ஆகிடும். பாக்கிறாங்களோ இல்லையோ. நிறைய கேள்விபட்டிருக்கலாம். அதே மெஸேஜ் பாஸ் மன்னாரு தான் இதுவும். அனில் கபூருக்கு பணம் வரும் என்ற நம்பிக்கையை விட, வராது என்ற நம்பிக்கைதான் அதிகம் இருந்திருக்கும். ஆனால், பதிந்து விட்டார். சினிமா - இந்த பதிவை நீண்ட நாட்களுக்கு நீடிக்க வைக்க நல்ல ஊடகம். அனில் கபூர் சார் & Feroz Abbas khan sir, அடுத்த படம் இந்த மாதிரியே எடுப்பீர்களா? எடுத்தால் ஒரு 15 பேர் உங்களுக்கு கண்டிப்பாக தேருவார்கள்.
Saturday, August 04, 2007
காதல் வரம் நான் வாங்க
கடைகண்கள் நீ வீச
கொக்கை போல நாள்தோறும்
ஒற்றை காலில் நின்றேன்
கண்மணி...
நின்றாய் இங்கு
மின்னல் கீற்றாய்
நித்தம் வாங்கும்
மூச்சு காற்றாய்
உன்னை சூழ்கிறேன்
நான்
உன்னை சூழ்கிறேன்...
இதில், மிர்ச்சி சிவா சுத்தமான அக்மார்க் சொதப்பல் சொதப்பி இருப்பார். வெங்கட் பிரபு சின்ன சின்ன இடங்களில் பாரம்பரிய தமிழ் சினிமா காட்சி காட்டி, முடிந்தவரை சொதப்பி இருப்பார். விஜயலக்ஷ்மி, சொல்றத்துக்கு ஒன்னுமில்லீங். இன்னொரு ரவுண்ட் வந்தால் சுகமாக இருக்கும்.
ரவுண்டு கட்டி அடித்திருப்பது SPB, சித்ரா, யுவன். நேற்றைக்கு காபி வித் அனுவில், தேவன் (ஸ்மையாய் யாய் - கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் பார்ட்டி), நரேஷ் அய்யர் (முன்பே வா, என் அன்பே வா), சுபிக்ஷா (கண்ட நாள் முதலாய்) அன்ட் மதுமிதா (கனா காணும் காலங்கள்) வந்து டிக்காஷன் போடாத காபி குடித்து அனுவிடம் அரட்டை அடித்து கொண்டிருந்தார்கள். இன்னமும் நீங்க சாதிக்கனுமப்பு. நிறைய பெரியவங்க பேசுறத கேளுங்க. சுபிக்ஷா பாந்தமாய் இருப்பதால், அவருக்கு மட்டும் எக்ஸெப்ஷன்.
Friday, August 03, 2007
Operation Tumbler
அவசரத்தில் அரட்டி உருட்டியதில், அந்த தண்ணீர் குடிக்கும் tumbler சரியாக sink ஓட்டையில் செட்டில் ஆகி விட்டிருந்தது. சரி, நல்ல வேளை பெரிய ஏழரை இல்லை, என நினைத்து, ஒரே அமுக்காக கையை விட்டதில் சற்றே உள்ளே போய் பட்டா போட்டு விட்டு கொண்டுவிட்டது. சுற்றி ரப்பர் மேட்டர் வேறு. சரி, இந்த தடவை smart அமுக் குடுக்கவேண்டும் என்று முயற்சி செய்தால், ம்ம். நான் வர மாட்டேன் என ரிஜிஸ்ட்ரார் ஆபிஸ் அக்கவுண்டன்ட் மாதிரி கல்லாகி விட்டிருந்தார். எவன்யா அது, சின்க் ஓட்டையையும் க்ளாஸ் சைசையும் சரியா பிட் ஆகற மாதிரி வச்சு, என்ன கலாய்க்கறீங்க.
எத்தனையோ பிரயத்தனம். சைடில் ஸ்பூன் வைத்து நெம்பியதில், ஸ்பூன் வளைந்து கொடுத்து நீ அங்கியே இரு ராஜா. நான் உன்ன எதுவும் செய்யல, என முடிவுக்கு வந்து விட்டிருந்தார். இப்போதைக்கு டென்ஷன் கழுத்துக்கு கீழ் வரைக்கும் வந்து விட்டிருந்தது. என்னப்பா ஒரு சின்ன tumbler மேட்டருக்கா இவ்ளோ அதகளம் பண்ற என்பவர்களுக்கு, நான் கொஞ்சம் வித்தியாசமுங்கோ. இதுல என்னா வித்தியாசமென்று கேட்பவர்களுக்கு, பதில் மெயிலில் அனுப்பி வைக்கப்படும்.
அடுத்த உபகரணம் கத்தி. எதுக்குப்பா? இந்தியாவுல இருந்தா கரடு முரடா கண்ட கஸ்மாலமும் கிடைக்கும். இங்கே எல்லாம், தொட்டால் பூ மலரும் டைப்பில் தான் பல மேட்டர்கள். கத்தி, என்னால முடியாது பாஸ். வேற ஆள் பாத்துக்கோங்க என கூர் பல் காட்டியது. சரி, ஸ்பூன் ஒரு பக்கம் கத்தி இன்னொரு பக்கம், ரெண்டு resource குறைவான பில்லிங் ரேட்டில் வேலைக்கு வைத்து, அப் ஹெலா ஹைலசா பாடி இழுக்க, வளைந்து கொடுத்த அவர், நீ பாடினத்துகாக இந்த வளைவு எல்லாம். மத்தபடி நான் வரதா இல்ல என்றார்.
தெனாலியில் ஏதோ நெட்டை மரம் ஜோவின் மேலும், தேவயானி மேலும் விழுந்து விட,கமல் 'டொக்டர், நீங்களும் தூக்குங்கோ, அந்த கண்டி கதிர்காம கந்தனும் தூக்கி தருவான்' என சொல்லி, கீழே ஜோவுக்கு கிச்சுகிச்சு மூட்டியிருப்பார். அந்த நிலைமைக்கு வந்த நான், திருமலை பாலாஜி சார் - இந்தியா வரும்போது உங்களுக்கு வடை மாலை சாத்தறேன் என வம்படிக்கு வேண்டிகொண்டும், ஓரணுவும் அசையவில்லை. அப்புறம் தான் உறைத்தது, வடை மாலை நங்கநல்லூர் சாருக்கு ஆச்சே.
சரி போனா போகட்டும், டெமாலிஷ் செய்து விடலாம் என்று பார்த்தால், உடைந்த பாகங்கள் சின்க்கின் உள்ளே விழுந்து, அடுத்த தலைவலியை கொடுக்கலாம் என்பதால், மெதுவாக டம்ளரின் ஓரத்தை சிராய்த்து, பீஸ் பீஸாக்கி ஒரு வழியாக எல்லா பாகத்தையும் எடுத்து என் 2 மணி நேர சனி திசையை முற்றும் போட்டேன்.
பள்ளியில் physics ஒழுங்காக படித்திருந்தால், இல்லை, logic சரியாக போட தெரிந்திருந்தால் இத்தனை குஸ்டமும் இருந்திருக்க வாய்ப்பில்லை. எப்படியோ அபார்ட்மெண்ட் தாத்தாவிடம் திட்டு வாங்குவத்தில் இருந்து தப்பித்து விட்டேன், கையில் சில பல வெட்டு காயங்களுடன். உடனே band-aid போட்டேன், பந்தாவாக வலம் வர வசதி. இதுல என்ன பந்தா என கேட்பவர்களுக்கு, உங்கள் மெயிலில் பதில் அனுப்பபடும்.
இத்தனையும் படித்து இங்கே வந்திருந்தால், டிஸ்னி லேண்டின் சில தேவதைகளின் கடைபார்வையை கஷ்பட்டாவது fed-ex செய்து வைக்கிறேன். உங்கள் வெள்ளெலியையோ, கருப்பெலியையோ உருட்டி உருட்டி நேராக (படிக்காமல்) இங்கே வந்திருந்தால், விஜய டி. ராஜேந்திரரின் அடுத்த பட DVD அனுப்பி வைக்கப்படும்.
சமத்தாக படித்து விட்டு, அவ்ளோ கஷ்டமாவா இருந்தது என அப்பாவியாய் கேட்டால், பதில் மெயிலில் எல்லாம் இல்லை. இங்கேயே. உங்கள் வீட்டு சின்க்கில் அந்த ஓட்டைக்கு சரி சமமான டம்ளரை போட்டு எடுங்கள் பார்ப்போம்.
Wednesday, August 01, 2007
கோட்டசாமி
இவரை உலுக்கி உலுக்கி கனவை கலைத்து காமெடி செய்திருப்பார்கள். கனவு மேட்டரை, முடிந்தவரை, இரவை தவிர மற்ற நேரத்தில் கண்டு அதற்கான பின் முன் சைட் விளைவுகளை அவரின் ஸ்டீரியோ குரலால் அலற அலற நகைச்சுவை இருந்திருக்கும்.
உண்மையில் அது பதறடிக்கும் விஷயமே. கண்ணாடியை மூக்கின் நுனியில் வைத்து, சரியாக குளிக்காமல் ஆராய்ச்சி செய்யும் எந்த ஒருவரும் இதை வியாதி தாங்க என்பார்கள். எதனால் இத்தனை பிரச்சினை? அவர்களெல்லாம் ரொம்ப யோசிப்பார்களோ, மூளை என்ற கைப்பிடி மேட்டரை கொஞ்ச நேரமும் ஒய்வெடுக்க விட மாட்டார்களோ? எது எப்படியோ, ஆனால், இவர்களின் வட்டாரத்தில் உள்ள மக்களுக்கு அவ்வப்போது வசதி தான். உள்ளே மறைத்து வைத்ததெல்லாம் வாந்தி எடுத்துவிடுவதில் உள்ள மகிழ்ச்சி (எப்போதாவது பக்கத்து வீட்டுகாரம்மா கணவரை கும்மி எடுக்கும் சத்தத்தை கேட்பதில் உள்ள அதே சந்தோஷம் தான்). ஆனால் பெரும்பாலான சமயம், வேண்டாத விருந்தாளி. அனந்தசயனத்தில் இருக்கும்போது பக்கத்தில் இருக்கும் நம்மவர் தீடீரென மேக்-அப் போடாத மனிஷா கொய்ராலாவை பார்த்த பயத்தில் கத்தினால் என்ன செய்ய முடியும். போடா பொடலங்கா என திட்டிவிட்டு மிஸ்டர் அனந்தசயனம் மறுபடியும் எப்போது வருவார் என தேவுடு காக்க வேண்டியது தான். அதிலும் நம்மவர், வேறு பாஷையாய் இருந்தால் பேஷ் பேஷ், ரொம்ப நன்னாயிருக்கும். அர்த்தம் புரியாமல் எதை கேட்டாலும் எரிச்சல் வரும். நடு நிசியில் கேட்டால், வெட்டி போடும் கொலை வெறியே வரும். ஆனால், நீங்கள் ரொம்பவுமே பதவிசான டைப் என்றால், நம்மவரின் கனவு வார்த்தைகளுக்கு செவி கொடுத்து வாயும் கொடுத்து ரொம்ப நல்ல பிள்ளையாக உங்களின் நட்ட நடு இரவை நம்மவருக்கு சமர்ப்பித்து விட்டிருப்பீர்கள்.
இப்போ என்னதான் சொல்ல வர என கேட்பவர்களுக்கு, இந்த கொட்டசாமி சின்ட்ரோம் தாக்கபட்ட ஒரு ஜீவனாக இருந்து விட்ட புண்ணியத்தில், என் அருகில் இருந்தவர்களின் நிலைமையை எப்போதாவது கொட்டிவிட வேண்டும் என்ற ஆதங்கத்தில் எழுதியது இதெல்லாம்.
Saturday, June 30, 2007
டயட்
வீட்டில் சாம்பாரும், ரசமும் கைவிடும் போது சப்வே இருக்க பயமின்றி இருந்திருக்கிறேன். இப்படியாக சப்வேவும் சாம்பாருமாக வாழ்க்கை தறிகெட்டு ஓடிகொண்டிருக்க, தீடீரென என் அறை நண்பருக்கு எவரோ ஒரு புண்ணியவான் டயட் வார்த்தையை உருட்டிவிட, பிடித்து கொண்டவர், என்னையும் அதை செய்யசொல்லி டார்ச்சர் செய்ய ஆரம்பித்து விட்டார். அரிசி சாப்பிடறத குறைக்கணும் (யோவ், நான் பொண்டாட்டியை கூட பார்க்காம இருந்துடுவேன், அரிசி பாக்காம!?!? இது ஓவரா இல்ல), சாப்பாடு அப்படின்றது 3 இல்ல 4 நிமிஷத்துல சாப்பிட்டு முடிக்கிற அளவுக்கு அளவா இருக்கணும் (நீ சொல்றது அப்போ சாப்பிடறது இல்ல, பாக்கிறது. எங்க ஊரு கல்யாண பந்தியை வந்து பாரு. பாக்கவே 10 நிமிஷம் ஆகும்.), பட்டர் யுஸ் பண்ண கூடாது (இத அபிராம பட்டர் வந்து சொல்லட்டும், கேக்கறேன்), ஜீரோ பர்சன்ட் கொழுப்பு இருக்கிற பால் தான் குடிக்கணும் (இந்த நாலரை பால் கூட தப்புன்னு சொல்றியா?), எந்த சாப்பிடற ஐட்டம் வாங்கினாலும் கொலஸ்ட்ரால், கொக்கு, மக்கு எல்லாம் பாக்கணும் (ஒரு தடவை பித்தம் தலைக்கேறி குடிக்கும் தண்ணீர் பாட்டிலில் கூட பார்த்தார் அறை நண்பர்), உருளைகிழங்குக்கு தடா போடனும் (அத உருளையை விதைக்கிறவங்க கிட்ட போய் சொல்லுடி), முறுக்கு செஞ்சா கூட எண்ணை இல்லாம செய்ய பழகிக்கணும் (ஓ, அப்போ மாவை அப்படியே சாப்பிட சொல்ற...), சாக்லேட் பாத்தா தலை தெறிக்க ஓடணும் (அதுல என்ன ஹெராயின் பவுடரா கலந்திருக்கு?) என ஆத்திசூடி பாட ஆரம்பித்தார். ஓதிய மந்திரம் உடம்புக்குள் எந்த பாகத்திலும் உள்ளே போக மறுத்தது. ஆனால், சுற்றியிருக்கும் மனிதர்கள் எப்படியோ அப்படி நீங்கள் மாற அதிக காலம் பிடிக்காது. என்னையும் வீழ்த்தியது, டயட் மோகம். முதல் சட்ட நடவடிக்கை, 12" பிரட்டை 6" பிரட்டாக மாற்றும் தீர்மானம் கையெழுத்தானது.
கையெழுத்தான முதல் நாள் - நான் போய் நின்றாலே, 12" இட்டாலியன் பிரட்டின் வயிற்றை கிழிக்கும் தங்க மனசுக்காரரை, மனசில்லாமல், 'அப்படியே நிறுத்துங்க. இன்னைக்கு 6"'. 'பார்டன் மீ, ஆர் யூ ஆல்ரைட்? ஈஸ் இட் foot long(12")?' 'இல்லப்பா மார்க்கு, 6" தான்.' 1 வருஷத்தில் அவர் முகத்தில் அப்படி ஒரு உணர்ச்சியை நான் பார்த்ததே இல்லை. அப்படி ஒரு வருத்தம். வேண்டா வெறுப்பாக வெட்டி, அந்த பக்கம் தள்ளினார். வாரத்தில் குறைந்தது 3 நாட்களாவது சப்வே போவதின் விளைவு இது.
கடைசியில் வசூலிக்கும் அம்மணி, என் கையில் அடக்கமான இந்த மேட்டரை பார்த்தவுடன், என்னப்பா ஆச்சு? உடம்பு எதாச்சும் சரியில்லையா என்ற ரீதியில் துக்கம் விசாரிக்க, எனக்கோ, அப்படி என்னப்பா தப்பு பண்ணிட்டேன் நான். தமிழர்களோட பாரம்பரிய கடமையான சிவாஜி பாக்குறத கூட தவறாம பண்ணிட்டேனேப்பா. அப்புறமும், இப்படி மாத்தி மாத்தி மொத்தறீங்க.
அன்றைக்கு விட்டது தான், திரும்ப யாராவது டயட் சொன்னால், போங்க போயி விவசாயம் பாருங்க என லாஜிக் இல்லாமல் சொல்ல ஆரம்பித்து விட்டேன்.
கணிப்பொறியில் கணக்கு பண்ணிகொண்டிருக்கும் என்னை போல் சில-பல பேர், டயட் தான் மூச்சு, பேச்சு, வாட்சு என்ற ரீதியில் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். உடல் வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே (எங்கியோ யாரோ ஒருவர், 'மாப்ள, வகதொகயில்லாம சீன் போடறான் பாரு' என சொல்லுவது அட்சர சுத்தமாக கேட்கிறது) கான்செப்ட் எல்லாம் சரிதான். ஆனால், ருசி மறந்து பசி மறந்து, 25 வயதிலேயே 50 வயதுக்கான வாழ்க்கை வாழ எனக்கு உடன்பாடில்லை. சீட்டை சூடு படுத்தும் நிரந்தர வேலையை சுத்தமாக விட்டு விட்டு, 1 மணிக்கொரு தடவை சும்மாகாட்டியும் காலாற நடந்து, தூரத்து சீட் மின்னலை (நீங்களே மின்னலாய் இருந்தால், மேடியை என மாற்றிகொள்ளவும்) சுற்றி விட்டு வாருங்கள். கண் கால் உடல் எல்லாம், கரடு முரடான வாழ்க்கை தடத்தில், கிங் பிஷர் ஏர்லைன்ஸ் போல குஜால்ஸாக ஓடும்.
Tuesday, June 26, 2007
ஆவியுடன் ஒரு இரவு
ஆவி எல்லாம் இருக்கா இல்லையான்னு ஒரு முடிவில்லாம, இதயெல்லாம் கற்பனை பண்ணி எழுதறது கஷ்டம்டா. போட்டோ பாத்து கவிதை எழுத தெரியுது இல்ல, அங்க இல்லயா கற்பனை. எல்லாம் வரும், எழுதலாம். ஏன் இப்படியெல்லாம் டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சிட்ட நீ? அப்படித்தான் பண்ணுவேன், எழுத முடியுமா முடியாதா? உனக்கு ஒன்னு சொல்றேன் கேளு, பதிவுலகம் அப்படின்றது அறிவிக்கபடாத ஒரு இலக்கிய உலகம். ஒரு வகையில எழுத்தாளர்களோட அடுத்த ரகுவம்சம் தான் இது. இதுனால என்ன சொல்ல வர? என்ன சொல்ல வரேன்னா, எழுத்து அப்படின்றது தானா உள்ளுக்குள்ள அப்படியே உருகி வரனும். நீ சொல்ற இந்த டாபிக் எழுத ஒரு feel கிடைக்காது கண்ணா. அதுவும் இல்லாம, நீ சொன்ன இந்த தலைப்பு வேற மலையாள வாடை அடிக்குது. ஒரு எழுத்தாளனோட உள்ளகிடைக்கையை புரிஞ்சிக்கோ ராசாத்தி. போடா லூசு, blog எழுதறதே ஒரு வெட்டி வேலை. போனா போகட்டும்னு, அத கொஞ்சம் மதிச்சு, சும்மா ரவுசு பண்ணினா இவ்ளோ டயாலாக் பேசுற. போதும் இதோட நிறுத்திக்கோ.
நிகழ் உலகம் - ஏலே மொக்க, இவன் தொல்லை தாங்க முடியலடா. நைட் ஆனா, அவனவன் கனவுல ஆஞ்ஜலீனா கூட காபி பப் போய்கிட்டு இருப்பான். அப்போ வந்து ராசாத்தி, blog அது இதுன்னு நடுராத்திரியில டிஸ்டர்ப் பண்றானுங்க. விடுறா. அவன் நிலமை தெரிஞ்சும் நாம அப்படி பேசறது எப்படி நியாயமாகும். இருக்கட்டுமே, ஒரு நாள் சரி, ரெண்டு நாள் சரி. அஞ்சாறு மாசமா இதே தொல்லையா போச்சேடா. இவனோட ஆளு செத்ததுக்கு, இவன் எங்கயாச்சும் விழுந்திருக்கலாம்.
கொஞ்சம் குரல் உயர்த்தி பேசியதில் விழித்தே விட்டிருந்தான். ஆனால், அசைவு காட்டாமல். கோவத்தில் சொன்னாலும், அதன் உண்மை இவன் கண்களை கொஞ்சம் கசக்கிவிட்டிருந்தது. அப்படி ஆகியிருக்கலாமோ?
Sunday, June 17, 2007
மௌனமே உன் பார்வையா, அந்த மௌனம் தானே அழகு.
எனக்கு பிடித்ததை பதிவு செய்துவிட நினைத்து இந்த வார்த்தைகள். முதல் காட்சி, முடியை பிய்த்து கொள்ளாமல், உதவி இயக்குனர்களை ஓட ஓட விரட்டாமல், எதார்த்தமான யோசனை. புதிதும் கூட. அங்கேயே, யாருப்பா இந்த ராதா மோகன் என கொஞ்சமாக கேட்க வைக்கிறார். அழகிய தீயே, பொன்னியின் செல்வனில் அப்படி ஒன்றும் அசரவில்லை நான். பேசாமல் ஒரு நாயகி. இப்போது வரும் படங்கள், பெரும்பாலும் இன்றைய பெண்களை அதிகம் பேசவிட்டே பார்க்கிறது. கதையை காட்சிகளாக மாற்றுவது பெரும் திறமை. அதிலும் மாற்றிய காட்சிகளை, ஒவ்வொன்றாக இணைப்பது தேர்ந்தவர்களால் மட்டுமே முடியும். எல்லா படத்துலயும் அப்படிதானேப்பா என்று கேட்பவர்கள், வெற்றி பெற்ற படங்களை திரும்ப ஓட விட்டு பார்த்தால் தெரியும் (இங்கு வெற்றி, கமர்ஷியல் அல்ல). கடைசியில் நம் தாத்தா பாட்டி கதை சொல்வது போலத்தான். ஒவ்வொரு சம்பவத்துக்கும் கொக்கி போட்டு கடைசியில் கிளைமாக்ஸ் கொண்டு வந்து முடிப்பார்கள். டைரக்டர்களும் அப்படியே. ராதா மோகன் கவனமாக கையாண்டுள்ள ஒரு இடம், திரைக்கதை.
தேவை இல்லாமல் படத்தில் யாரும் சுத்தவில்லை. யாரும் அதிகமாக வசனம் பேசவில்லை. உணர்ச்சிகளை கொட்டி குவிக்கவில்லை. சிரிப்பு வரவைக்க வேண்டுமென்று, பெரும் ப்ரயத்தனபடவில்லை. எல்லாம் சாதாரணமாக எப்படி வாழ்க்கையில் வந்து போகுமோ அப்படியே வந்து எட்டி பார்த்து ஹலோ சொல்லிவிட்டு போகிறது. இது பெரும் பலம். நல்ல முயற்சி.
உறுத்திய சில விஷயங்கள் - பாடல்கள். எதார்த்தத்தை மீறிய ஒரு சம்பவம் இது. மொழி போன்ற ஒரு படத்துக்கு கண்டிப்பாக பாடல் தேவையே இல்லை. கமர்ஷியல் ஹிட் பார்க்க வேண்டிய படங்கள் இதை செய்ய வேண்டிய கட்டாயம். ஆனால், பிரகாஷ் ராஜுக்கு இந்த கட்டாயம் கண்டிப்பாக இல்லை. நம்மவர்கள் எதற்கெடுத்தாலும் ஹாலிவுட் ஹாலிவுட் என்பார்கள், ஆனால் இதில் மட்டும் ஹாலிவுட் வேண்டாம். என்னப்பா நியாயம். தனி ஆல்பமாக வெளியிட்டிருக்கலாம். இதனால், மொழி படத்தின் இசை என்னவோ மட்டம் என்பதல்ல. பதிவின் முதல் வரியே பாடல்கள் எனக்கு பிடித்ததால் தான்.
கொஞ்சம் லாஜிக் தப்பிய இடம் - கார்த்திக் தன் பிறந்த நாளுக்காக, பள்ளிக்கு உதவி செய்வார். அதற்கு அங்குள்ள பிள்ளைகள் நன்றி சொல்வார்கள் கூட்டமாக. கையை மேலே ஆட்டி. இதற்கு பக்கத்திலுள்ள ஷீலா, 'உங்களுக்கு நன்றி சொல்றாங்க' என்பார். இந்த காட்சிக்கு முன்பாகவே கார்த்திக், விஜி இவர்கள் இதை பல முறை செய்வது போல சில காட்சிகள் வந்து போகும் பாடலில். கொஞ்சம் கவனித்திருக்கலாமோ?
இதற்கு மேல் தேடினாலும் எங்கும் கிடைக்காது bug. டுயட் மூவிஸுக்கு குரு உச்சத்தில்.
சிவாஜி பார்த்து நொந்து நூடுல்ஸ் ஆனதில், மொழி பட பார்வை. ஷங்கர் சார், என்னாச்சு உங்களுக்கு. உங்களின் அழகிய குயிலே script இன்னமும் உங்களுக்குள் இருக்கும். எடுத்து எங்களை போன்ற உங்களின் ரசிகர்களை ஆசுவாசபடுத்துவீர்கள் என நம்புகிறோம். சிவாஜியில் கூகுள் search போட்டு பார்த்தும் not found நீங்கள் (அதான், முதல் பாட்டுல வந்து போறேனேன்னு காமெடி பண்ண கூடாது ஆமா)
Monday, June 04, 2007
கமலின் அப்பாக்களில் யாரை எனக்கு பிடித்திருந்தது...
பிலஹரி மார்த்தாண்டம் பிள்ளை: வீட்டு சாமரத்தில் (சரியான வார்த்தையா தெரியவில்லை, நடு வீட்டில் மாடியை பார்த்தார் போல இருக்கும் கம்பி) மகனை தொங்கவிட்டு பார்க்கும், அழகான அப்பா. சங்கீதம், இதோ இவர்களுக்கு மட்டும் தான் என நினைக்கும் சாதனையாளர். மகன், சாஸ்திரிய சங்கீதத்தை, மரத்தை உடைப்பவர்களிடம் சொஷலிசத்துடன் தந்தன்னானா பாடினால் கண்ணாடியை தாண்டி கண் சிவப்பு காட்டும் BPகாரர். பிள்ளைவாள், இதற்கு அப்புறம் தான், உதயமூர்த்தியின் தந்தை. சுத்த தன்யாசி எங்கெங்கே பாட வேண்டும் என்று தியாக ப்ரம்மம் சொல்லாததை, தன் மகனுக்கு சொன்னவர். இத்தனையும் தாண்டி உங்களுக்கு ஜெமினி கணேசன் தெரிந்தால், நிறைய சினிமா பார்ப்பவர் இல்லை நீங்கள்.
பூர்ணம் விஸ்வநாதன் - வருமையின் நிறம் சிவப்பு: இவரின் பாத்திரபெயர் சுத்தமாக நியாபகம் இல்லை. ஆனால், கமல் இவரின் வீணையை விற்று விட்டு வந்து அல்வா குடுக்கும்போது, பார்க்கும் பார்வையும் பேச்சும், இன்னும் மறக்கவில்லை. 'இப்போ சொல்றதுக்கு பாரதி பாட்டு எதுவும் இல்லயோ?' என சொல்லி, மகனின் வாயில் பாரதி வார்த்தைகளை போட்டு வாங்கியவர். பிலஹரி மார்த்தாண்டம் பிள்ளைக்கும் இவருக்கும் பெரிய வித்தியாசமில்லை. பிள்ளைவாளும், பூர்ணம் சாரும் மகனை மகனாகவே பார்த்தவர்கள். தனி ஒருவன் அவன் என நினைத்துபார்க்கும் சரியானதை செய்யவில்லை. கடைசியில் ஷேவ் செய்ய மகனிடமே போய் நிற்கும் நிலை. கடைசி வரை, நான் சொன்னது போல் இவன் வரவில்லையே என ஏங்கும் அப்பாக்களின் சுத்தமான நகல்.
பாலக்காடு மணி ஐயர் - காமேஸ்வரனை சமையல் கட்டிற்குள்ளே வளைத்து போட்டு, வரதுகுட்டியை துணைக்கு அமர்த்திய, அக்மார்க் மாமா (ஐயராத்து மாமா). கையை பிடித்து இழுத்துவிட்டான் என்பதற்காக, திரிபுரசுந்தரியை மகனுக்கு கைகோர்த்துவிட்ட அப்பா, திருட்டுபாட்டி கூட இருப்பது தெரிந்தும். செல்லபெட்டியை மகனுக்கும் மேலாக தூக்கி கொஞ்சியவர். மகனுடன் சேர்ந்து, சாம்பாரில் கலந்துவிட்ட மீனை எல்லா இலையிலும் தேடிய சமையல்காரர். ஏ பாலகாட்டு மணி ஐயரே, கிரேஸி மோகனோட பாலகாட்டு காமெடியை நன்னாயிட்டு நடிச்சேளாக்கும். இன்னொரு தடவை, இவரே நினைத்தாலும் அப்படி ஒரு சாம்பார் செய்ய முடியாது.
பெரிய தேவர் -
'அதான், சொல்றாக இல்ல. டிக்கெட்ட மாத்தி போடுங்க.'
'இந்த காட்டுமிராண்டி கூட்டத்துல உங்கொப்பனும் ஒருத்தந்தேன்றத மறந்துறாத'
'தீடீர்னு அவன வேல் கம்ப தூக்கி போட்டுட்டு விஞ்சானம் பேச வாடான்னா எப்படி வருவான்.'
'போ, செத்து போ, நான் தடுக்கமுடியுமா. எல்லா பயபுள்ளயும் ஒரு நாளக்கி சாக வேண்டியதுதேன்.'
'ஆனா, வெத, நான் போட்டது. இதெல்லாம் என்ன பெருமையா, கடம ஒவ்வொருத்தனோட கடம'
'என் பேத்திக தான்பா எனக்கு மருந்து'
'குட்டி கழுத, அம்மா பாட்டுதேன்'.
தெலுங்கு பெண்ணை பட்டாசு வெடிக்கும்போது எதேச்சையாக கை பிடித்த மகனை, ஒரு பார்வையால் அதட்டியவர். அப்பளத்தை கறமுறவென கடிக்கும் பானுவை, மறுபடியும் பார்வையில் நிறுத்தியவர். தேவர் காலடி மண்ணே பாட்டை பெருசுகள் பாட, நாந்தேன் பெரியதேவன் என்ற அழகான கம்பீரத்தை அமைதியாக பரப்புவார். சுரம் ஏற்றி கொள்ளும் பெரிய மகனை என்ன செய்வதென தெரியாமல், விட்டுவிட்ட பெரிய மனுசன். சின்னதேவரை நேரில் பார்த்து பேசாமல், தேவையான அளவு கோபத்தை கொட்டிவிட்ட பெரியதேவர். கொஞ்சமும் மதிக்காத, மாயனை எப்படி மாற்றுவது என யோசித்து யோசித்து பேத்திகளிடம் சொர்க்க வரம் வாங்கியவர். மிரட்டும் உடல் வாகு இல்லை, ஆனால், இவரின் ஊர் மொத்தமும் அடங்கியே நடக்கும். மெக்டொனால்ட்ஸ், பர்கர் கிங் ஆரம்பிக்க இருந்த மகனை, வேப்பென்னை தடவும் பஞ்சவர்ணத்துக்கு கணவனாக மாற்றிய பெரியதேவர்.
தசாவதாரத்தில் இப்படி ஒரு அப்பாவை ஒரு அவதாரத்திற்காவது உருவாக்கி இருக்கிறாரா என தெரியவில்லை. கையும் மூளையும் நமநமவென அரித்ததால், இப்படி ஒரு பெரிய சினிமா அப்பா பதிவு. வெட்டியாக இருப்பதாக நினைத்துகொண்டால், நான் பொறுப்பில்லீங்கோவ்.
Sunday, June 03, 2007
ரஹ்மான் - 3rd Dimension tour
உட்காரவும், சித்ரா ஹிந்தி பாடல் ஒன்றை காற்றில் கசிந்து கொண்டிருந்தார். எங்கே இருந்து தான் இந்த குரலை இப்படியே இத்தனை நாளைக்கு வைத்திருக்கிறாரோ, சின்னகுயில். முடிந்தவுடன், வந்தேவிட்டார், இசைபுயல். ஷெர்வானியில் வழக்கம் போல அமைதியாக வந்து நின்றார். ஆடிட்டோரியம் அடங்க சிறிது நேரம் ஆனது (பேசாமல் நின்றதற்கே. That's A.R.). அப்படி ஒரு அலறல். 1992ல், நான் வந்துட்டேன் - இனி நம்ம ராஜாங்கம் தான் என அழுத்தி முத்திரையை குத்திய A.R.ரஹ்மான். பார்த்தேவிட்டேன். தலைவா என கத்தவேண்டும் போலிருந்தது. இளையராஜா செய்யாத ஒன்றை இவர் என்ன செய்து விட்டார் என அடிக்கடி கேள்வி தோன்றும். அத்தனையும், அவரின் தில் சே'வும், பாட்ஷாலா'வும், புது வெள்ளை மழையும், காதல் ரோஜாவும் கேட்டால் ரெண்டு பேரும் நமக்கு தீனி போடறாங்க, அப்புறம் என்ன needless comparison என சொல்லும், உள்ளே.
Friday, June 01, 2007
தனி ஒருவனுக்கு வேலை இல்லையெனில்...
மெஸன்ஞரில் எப்போதும் எட்டி பார்க்காத நண்பன் அன்று 'என்னப்பா தம்பி, நல்லா இருக்கியா?'. Message எட்டி பார்த்தது.
இவன் - சொல்வதற்கு பெரிதாய் இல்லாத, கல்லூரியில் லூட்டி அடித்தும், கொஞ்சம் படித்தும் பொழுதை ஒன்றாக சுற்றிய நண்பன்.
கல்லூரி விட்டு வெளியேறிய பொழுது, நிறைய பேருக்கு, கையில் இரண்டு மூன்று சாய்ஸ் இருந்தது, வேலைக்கு சேர. தறி கெட்டு ஓடவில்லை என்றாலும், மெகா சைஸில் படிக்காததால், நாங்கள் சிலர் கோடம்பாக்கம் சாலைகளிலும், மவுண்ட் ரோடிலும், நுங்கம்பாக்கத்திலும், கோரமங்களாவிலும் resume விநியோகம் செய்து கொண்டிருந்தோம். இவனும் தான். நாட்கள் ஓட, ஒவ்வொருவனுக்கும் வேலை கிடைத்து, Cafe day காபி குடிக்க ஆரம்பித்தாகிவிட்டது. இவனை தவிர்த்து.
3 வருடங்கள் இருக்கும். இப்போது, இவன் யாஹு மெஸஞ்சரில்.
டே, உயிரோட தான் இருக்கியா?
இருக்கேன் தம்பி. இப்போ முழு ஆரோக்கியத்தோட, தெம்பா இருக்கேன்.
இப்போவாச்சும், செல் போன் நம்பர் மாத்தாம வெச்சிருக்கியா?
இப்போ இருக்கு தம்பி. அப்போ நிலம சரியில்ல. வேலை கெடைக்கலயான்னு அவனவன் போன் போட்டு விசாரிச்சு, நமக்கு தலவலிய குடுத்ததால, நம்பர் மாத்திகிட்டே இருந்தேன். நான் இப்போ, TCSல இருக்கேன்பா தம்பி.
கலக்கற மாம்ஸ். சந்தோஷமா இருக்குடா. வெலை எல்லாம் செட் ஆச்சா?
ஆச்சு. ரெண்டு மாசமாச்சுப்பா. ஏதோ, இது வரைக்கும் நல்லா வண்டி ஓடுது.
ரெண்டு மாசமாச்சா? ஏண்டா சொல்லல.
உனக்கே தெரியுமில்ல. ஏற்கெனவே, ரெண்டு கம்பேனில வேல கெடச்சு, அங்க இருந்து வெளியே வந்தது.
சரி விடு, இப்போ, டாடா மடியில உக்காந்திருக்க. ஜமாய்.
ஏதோ உங்க புண்ணியம்பா.
டேய்....
சரி தம்பி, உன்னோட சேலரி என்ன?
(கொஞ்சம் கிர்ரடித்தது. ஏன் இப்படி கேட்கிறான்?)
ஏன்டா, கேட்டு எதாச்சும் கேஸ் போட போறியா?
சொல்லு தம்பி. எனக்கு உன்னோடது, நம்ம பிளே பாய் பரந்தாமனோடது, ஜிம் பாய், நார்த் பசங்க இவுங்களோட சேலரி எல்லாம் தெரிஞ்சா நல்லா இருக்கும்.
நல்லா தானேடா இருக்க?
இருக்கேன் தம்பி. நீ சொல்லு. காரணத்தோட தான் கேக்கறேன்.
சொல்றத கேளு. பணத்த வெச்சு எதுவும் இங்க முடிவாகறதில்ல. Skills வளத்துக்கோ. தானா, நீ எதிர்பாக்கிறது வரும்.
தம்பி, இதெல்லாம் நான் கேக்கல. இருந்தாலும், நீ சொன்னது எல்லாம் சரி தான். அப்படியே ஒத்துக்கறேன். நான் கேட்டதுக்கு பதில் சொல்லு.
(ஏதோ காரணத்துடன் கேட்டதால், சொன்னேன்)
சரி இப்போ சொல்லு. ஏன் கேட்ட? இத வச்சிகிட்டு என்ன பண்ண போற?
அடிக்கனும் தம்பி. ஒவ்வொருத்தனயா சொல்லி சொல்லி அடிக்கனும்.
:-o ஏண்டா இந்த கொல வெறி?
உனக்கு தெரியாது தம்பி. 3 வருஷம். காலேஜ் படிச்ச அதே அளவு 3 வருஷம், நான் வேலை தேடினேன். இன்னைக்கு நம்ம காலேஜ்'ல இருந்து வெளிய வர ஒவ்வொருத்தனும், கையில நாலு offer வெச்சிகிட்டு வரான். அவனுக்கு என்ன தெரியும், வெளிய சில பேரு, கம்பேனி வாசல் செக்யூரிட்டி கிட்ட அல்லோலகல்லோல படறான்னு. அந்த மாதிரி சில பேர, இந்த 3 வருஷ பீரியட்ல பேசி, பழகினத பார்த்தா தெரியும்ப்பா. சில விஷயங்கள அப்படி அப்படியே விட்டுட்டு போகனும்னு தான் தோனுது. ஆனா, உன்ன சுத்தி இருக்கிற/நடக்கிறது எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா உன்ன மாத்திடும். கடைசியில, என்னை கோவபடவெச்சவனும் மனுசன் தான், நானும் மனுசன் தான். சினிமா டயலாக் மாதிரி தான்பா தோனும். ஆனா, கடைசியில அப்படி தான் நடக்குது. இந்த லிஸ்ட்ல நீயும் இருக்கப்பா. பாரபட்சம் பாக்காம, முந்திகிட்டு ஓடனும் தம்பி. இதுல எவன் அவமானபட்டாலும் சரி, என்ன சொன்னாலும் சரி. மோதி பாத்துட வேண்டியது தான்.
ரொம்ப கோவமா இருக்கியேடா. ஒரு சோடா வேணும்னா சாப்பிடறயா? கண்ணா, நீ என்னதான் சொன்னாலும், ஏதோ கேப்டன் படமும் அஜித் படமும் சேத்து பார்த்த effectடா.
அதற்கு பிறகு, கல்லூரியில் படித்த பிடித்த சுரிதார் மலர்களை பற்றி இன்றைய நிலவரத்தை அலசி, காய போட்டு கொண்டிருந்தோம்.
தம்பி, இந்த ஆர்குட் ஆர்குட்டுன்னு சொல்றாங்க இல்ல. அதுல நம்ம பசங்க இருக்காங்களா?
ஓ, பேஷா. பேச்சிலரா, ஆன்சைட்ல இருக்கிற ஒவ்வொருத்தனுக்கும் ஆர்குட் தான்டா உயிர் மூச்சு. நம்ம பசங்கள கேக்கனுமா, ஆர்குட் வெந்து பொகயற அளவுக்கு கடலையும் மாங்காயும் போடறானுங்க. நீயுமான்னு கேக்காத? ஊரோட வாழ்ந்து பழகுன்னு எங்க பாட்டி சொல்லியிருக்கு.
மொதல் வேலையா, என்ன ஆர்குட்ல உன்னோட பிரண்ட்ஸ் லிஸ்ட்ல புடிச்சி போடு. அப்புறம், பேசறேன் பாரு. 3 வருஷத்துல, ஒவ்வொரு நாளும், தெரிஞ்சவங்கள பார்த்தா ஓடி ஒளிஞ்ச கருமம் போதும்.
மாப்ஸ், நீ எதுக்கும் கொஞ்சம் நல்ல டாக்டர பாக்கிறது நல்லதுன்னு நெனைக்கிறேன். ஓவரா எரிமலை மாதிரி வெடிக்காதடா. உடம்புக்கு நல்லதில்ல.
தம்பி, முன்னயே சொன்னது தான். திரும்ப திரும்ப சொன்னாலும், அது மட்டும் தான் நெஜம்.
இன்றைக்கெல்லாம் வேலை கிடைப்பதென்பது, இதயம் திக்கடிக்கிற நிலைமை இல்லை (பெரும்பாலும்). வருமையின் நிறம் சிவப்பு மாதிரி படத்தை இப்போது எடுத்தால், என்னடா காமெடி பண்றாங்க என்று தாராளமாக காமென்ட் வரும். கம்பெனிகள் 10K, 20K, 30K என தலைகளை ஒவ்வொரு பவுர்ணமிக்கும் அள்ளி, பெற்றவர்களுக்கு, பயபடாதீங்க என சூடம் ஏற்றி சத்தியம் செய்கிறார்கள். இந்தியாவின் பொருளாதாரம் தறி கெட்டு நல்ல திசையிலே சிறகடித்து பறந்து கொண்டிருக்கிறது. அதற்கு இதுவும் ஒரு காரணம். எந்த அளவுகோலிலும் இந்த மாற்றங்கள், கண்டிப்பாக சக்ஸஸ் குறியீடு தான். ஆனால், இந்த நண்பன் போன்ற சிலர், இந்த மாற்றம் பெரிதாக தோன்றி, கொஞ்சம் கொஞ்சமாக மக்களை முடிந்தவரை அலைகழிக்கும் என நினைக்கிறார்கள். அதிகம் இல்லையென தோன்றினாலும், தொடர்ந்தால், சொந்த செலவில் சூனியம்.
(Disci: Title maynot be related to the post)
Wednesday, May 30, 2007
பேர கேட்டவுடனே சும்மா அதிருது இல்ல
இப்போது, சிவாஜி. இந்த படம், வெற்றியோ தோல்வியோ. ஆனால், முதல் ஒரு வாரமும், முதல் காட்சியும்!!! ஆச்சரியங்கள் மட்டுமே.
எதிர்பார்த்து காத்திருக்கும் பல பேர்களில் ஒருவன் டிரய்லர் பார்த்த உற்சாகத்தில் எழுதியது. கலக்குங்க boss!!!
Saturday, May 26, 2007
போதும் நிறுத்திக்கலாம்
தொடர் படங்கள் (sequel movie)
இதை யார் தொடங்கி வைத்தார்கள் என தெரியவில்லை. அவர் இருந்தால், தலைவா, போதும் நீ சொன்னதும், இவங்க அத கிண்டி உப்புமா பண்றதும் என சொல்ல தோன்றுகிறது. இந்த வகை, பெரும்பாலும் தயாரிப்பாளர்களுக்கு லாபம். பாக்ஸ் ஆபிஸில் மில்லியன் மில்லியனாக கொள்முதல் செய்திருக்கிறார்கள். இப்போதும் அப்படி என்று நினைக்கிறார்கள் போல. இத்தனையும் Shrek the Third, Pirates of the carribean (at world's end) பார்த்தவுடன் தோன்றியது. இவை இரண்டும், அவற்றின் முதல்களை மிஞ்சும் ஆசையுடன் திரைகளில் ஒயாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. வந்த புதிதில், மாத்தி யோசித்த படங்கள் இவை. அதற்கு பிறகு, யோசிக்க வேண்டாம் என முடிவெடுத்து விட்டார்களோ என்னவோ. போர் அடிக்கவைப்பது, இதற்கு பின் வரும் அனகோன்டா நீளத்துக்கு பெரிய லிஸ்ட். அதில் நிறைய 1,2,3 மேட்டர் தான் (Ocean thirteen, Indian Jones 4, Hellboy 2, Jurassic Park 4, Rush Hour 3...). போதும்பா. (உங்களை பார்த்து சூடு போட்டுக்கொள்ள வேறு ஒரு கூட்டம் பாலிவுட் என்ற பெயரில் இயங்கி வருகிறது. தயவு செய்து நிறுத்தவும்.)
பாலிவுட்
அதிகம் ஹிந்தி படங்கள் பார்த்ததில்லை முன்பெல்லாம். இப்போது, பாதி ஹிந்திவாலா. ஏக் காவ்ன் மேய்ன் ஏக் கிஸான் ரகுதாதா, நிலை இல்லை. ஒரு டைரக்டர், தயாரிப்பாளரிடம் கதை சொல்ல வருகிறார். கதை பிடித்திருக்கிறது. தயாரிப்பாளர் சொல்லும் அடுத்த வார்த்தை, இதுல அமிதாப் பச்சன் எந்த கேரக்டர்ல வராரு? கதை எந்த நாட்டுல நடக்குது, யுஸ்ஸா, யுகேவா? இப்படி ஒரு வியாதி அவர்களுக்கு. எல்லா படங்களும் இப்படி இல்லை. ஆனால், பல படங்கள் அப்படித்தான். நிறுத்தினால் நலம்.
விஜய்
யார் மனசுல யாரு? உங்க மனசுல யாரு? இந்த டயலாக் கேட்டாலே, பாலக்காடு பக்கம் ரயிலில் வித் அவுட்டில் போன அதிர்வு. அவரை தமிழில் பேச சொல்லுங்கள், இல்லை, மலையாளத்தில் பேச சொல்லுங்கள். இத்தனைக்கும், அவருடைய மேல் மாடி தகவல்களால் நிரம்பி வழிகிறது. ஆச்சரியம் தான், அலுக்க அலுக்க பாராட்டியாகி விட்டது. ஆனால், இந்த மல்லு தமிழ் கலப்பு, கொஞ்ச காலம் காமெடியாக இருந்து, இப்போது ட்ரேஜிடியாக மாறி விட்டது. விஜய் டிவி கவனித்தால் நலம்.
இப்போதைக்கு மீடியா போர் இவ்வளவு தான். மற்ற போர் எல்லாம், போரடிப்பதால், பிறகு.
Wednesday, May 23, 2007
எங்கெங்கு காணினும்...
சரி, எப்பவும் போல ஓங்கி உலகளக்கும் பில்டிங் பார்த்து, அமெரிக்க குட்டிகளை கண் குளிர சைட்டடித்து (அட, நாய் குட்டிங்க), கால் வலித்தாலும் கூலாக நடந்து, குளிர் காற்று தான் வாங்க போகிறோம் என்று நினைத்தேன். நண்பனின் திட்டம் படு ஜோராக பின்னப்பட்டு இருந்தது, எனக்கு தெரியாமல்.
ரயிலில் போகும் போதே திட்டத்தை அமுலுக்கு கொண்டு வந்தார், 'ஜீ, எந்த ஸ்டேஷன்ல எறங்கினா நிறைய பிச்சகாரங்கள பாக்கலாம்'. நானும் பெரிதும் தெரிந்தவனாக, ' Embarcaderoல இறங்க போறோம், அங்க நிறைய பேரை பாக்கலாம்'. ஏதோ ஒரு பொது அறிவுக்காக கேட்கிறார் போல. விட்டு விட்டேன்.
Embarcaderoல் இறங்கி, படி மேலேறி,
பாத்தீங்களா, எவ்ளொ பெரிய... யோவ் அங்க என்னய்யா பண்ற.
ஜீ, அங்க பாருங்க ஒருத்தர் நம்ம அந்நியன் மாதிரியே நடந்து வாராரு.
அதுக்கு என்ன இப்போ?
ஒரு போட்டோ எடுத்துகிறவா.
இதெல்லாம் பாக்கிறதோட நிறுத்திக்கனும், போட்டோ எல்லாம் எடுத்து அப்புறம், நம்மள 911 கால் பண்ணி உள்ள போட்டுட போறாங்க, வாங்க போவோம்.
அதெல்லாம் நான் பாத்துக்கறேன். நீங்க இப்படி ஒட்டினாப்போல நில்லுங்க, உங்கள focus பண்றா மாதிரி, அவுர எடுத்துடறேன்.

திட்டத்தை கண கச்சிதமாக நிறைவேற்றி கொண்டிருந்தார்.
ஒகே, இப்போ கெளம்புவோமா.
சரி ஜீ.
திட்டத்தை முறியடித்த சந்தோஷத்தில் பஸ் ஸ்டாப்பில் காத்து கொண்டிருக்க ஆரம்பித்தோம். பஸ் வந்தாச்சு, வாங்க போகலாம். பக்கத்தில் ஆள் எஸ்கேப். எதிர்பார்த்தது போல, இன்னொரு பிச்சைகாரரை நோக்கி முன்னேறி கொண்டிருந்தார்.
ஏலே, வேணாம், நான் இங்க கொஞ்ச நாள் நல்லவனா இருக்கனும்னு பாக்கறேன். நீ என்னடான்னா, அப்படியெல்லாம் இருக்கவிட மாட்டேன்னு, அலம்பல் பண்ற.
சீரியசாகவே சொல்லி பார்த்தேன். பித்தம் தலைக்கேறி விட்டிருந்தது. இந்த முறை, என்னை நிற்க வைத்து மேஜிக் எதுவும் செய்ய வில்லை. தப்பித்தேன். திட்டத்தின் அடுத்தடுத்த மைல் கல்களை கடந்து கொண்டிருந்தார் நண்பர்.
நான் சிறிது முகம் காட்டியதால், அடக்கி வாசிக்கபட்டது திட்டம். ஆனால், உள்ளுக்குள் தீரா தாகத்துடன் நடக்கும் வழி எல்லாம், அவர்களை தேடிகொண்டே வந்தார். அசந்த நேரத்தில், இன்னொரு கிளிக், இன்னொரு பிச்சைகாரார். எனக்கு தெரியாமல் திட்டதை செயல்படுத்தியதில், பெருமிதம் நண்பரிடம். நன்றாக இருந்த முகத்தை, மறுபடியும், மூக்கு மேல் கோபம் வந்தது மாதிரி வைத்துகொண்டேன்.
ஜீ, இங்க நில்லுங்க. கலக்கல், போட்டோ ஸ்பாட். இங்க போட்டோ எடுத்து, வீட்டுக்கு அனுப்புங்க, உடனே பொண்ணு உங்க கண்ணு முன்னாடி வந்து நிப்பா. மூக்கின் மேலிருந்த கோபத்தை கொஞ்ச நேரத்திற்கு ஐஸ் வைத்து மறைத்தார். நானும் நம்பி, தலை வாரி, முகத்தை சரி செய்து நின்றால், திட்டத்தின் அடுத்த படியை கடந்து விட்டிருந்தார். எனக்கு பின், ஒரு சின்ன பிச்சைகார கும்பல். இந்த கிளிக்கும் வெற்றி.
போதுமப்பா, உன்னோட கலை ஆர்வம். Downtown வந்தோமா, வாசல்ல இருந்து கிளப் பார்த்தோமா, பர்கர் சாப்பிட்டோமா, கண்ணுக்கும் மனசுக்கும் குளிர்ச்சியா நாலு விஷயங்கள நிரப்பினோமோன்னு இல்லாம, சின்ன புள்ளதனமா, விளையாட்டு பண்ணிகிட்டிருக்க. இந்த முறை நண்பர், திருந்திய இதயத்துடன், சரி ஜீ என்றார். இப்போது கேமரா அதன் இடத்தில் பதுங்கி விட்டிருந்தது. இப்படியாக, அடுத்த இரண்டு மணி நேரம் பறந்தது.
பதுங்கிய வேதாளம் ஒரு போஸ்டரை பார்த்து விழித்தது. ஜீ, கடைசியா ஒரே ஒரு போட்டோ. இவ்ளோ நேரம் நல்லா இருந்தியேப்பா. பதில் வரவில்லை. போஸ்டரை focus செய்து கொண்டிருந்தார். பக்கத்தில் போஸ்டர் இருப்பது தெரியாமல் உட்கார்த்திருந்த ஆன்ட்டி, இவர் போகஸ் செய்வதை பார்த்து, என்ன போஸ்டர் அது என பார்த்து விட்டு, எங்களிடம் ஒரு பய பார்வையுடன் விலகினார்.
இன்னைக்கு என்னோட ராசிக்கு பலன் பாக்க இந்த ஊருல ஒரு தினசரி காலண்டர் இல்லையே என நொந்து கொண்டிருந்தேன். இருந்திருந்தாலும், என்ன இருக்கும் என ஊகிக்க முடிந்தது. தெரிந்தவர்களால் வீண் அபாயம்.
ஒரு வழியாக, ஊர்கோலத்தை பலத்த பயத்துடன் முடித்தே விட்டோம். வரும் வழியில், சே குவேரா பற்றி ஆதி அந்தத்தை சொல்லிகொண்டிருந்தார், நான் கேட்காமலே. நாங்கள் இருப்பது, ஒரு அமெரிக்க ரயிலில். பக்கத்தில் இருப்பது பெரும்பாலும் அமெரிக்கர்கள். பேசுவது சே பற்றி. தில்லு தான்யா உனக்கு என்றேன். அவர பத்தி அப்புறமா பேசலாம். இப்போ சபையை கலைப்போம் என கூறி, சில சீட்கள் தள்ளி உட்கார்ந்திருந்த சிலரை வெறிக்க தொடங்கினேன்.
சொல்லிய விஷயத்தில், பெரும்பாலும் சுவாரஸியம் இல்லை. ஆனால், பிச்சைகாரர்கள், அதுவும் அமெரிக்காவில் என்றால் யாரும் வாயை பிளக்க மாட்டார்கள் என நினைத்தேன். முதலில் பிளந்தது என் தோழி. யுஸ்ல இவுங்க எல்லாம் இருக்காங்களா, ஆச்சரியமா இருக்குப்பா என்றாள். அப்போது உறைத்தது நண்பரின் உள் குத்து.
இவர்கள் இல்லாமல் ஒரு இடம் இருக்க முடியுமா? திருத்தி அமைத்தாலும், அனைவரும் திருந்துவதில்லை. சிலருக்கு அதன் ருசி சுண்டி இழுக்கிறது. இது எல்லாருக்கும் தெரிந்த அறிந்த விஷயம் தான். அமெரிக்கா என்பது தான் சிலரின் ஆச்சரியம். எங்கும் மனித மனம் ஒன்று தான். மனிதன் ஒன்று தான்.
Monday, May 21, 2007
எஸ்டோனியா
சைபர் வார் (தமிழில் அர்த்தபடுத்தி கொள்ள வேண்டாம்). இதில் சிக்கிய புண்ணியம் இந்த நாட்டுக்கு. சிக்கி, சின்னா பின்னமாகவில்லை. பிண்ணனி (அறுக்காமல் நாலு லைன்) - எஸ்டோனியா சோவியத் யூனியனில் கூண்டில் இருந்து இறக்கை முளைத்து பிரிந்து, பறந்த கிளி. சொல்லாமலேயே புரிந்திருக்கும். பங்காளி சண்டை யார் யாருக்கு என்று. போன மாதம் 27ம் தேதி, எஸ்டோனியர்கள் தங்கள் நாட்டிலுள்ள ஒரு ரஷ்ய போர் சின்னத்தை போட்டு தள்ளிவிட்டார்கள். இது பிடிக்காத (அப்படித்தாங்க செய்தி சொல்லுது) சில பெத்த ராயுடுகள், இவர்களின் ஈ ராஜ்ஜியத்தை (e-governance, e-bank, e-news) சில நேர/நாட்களுக்கு தற்காலிகமாக போட்டு தள்ளிவிட்டார்கள் (DDoS attack).
நம்ம ஊர் மாமன் மச்சான் சண்டை தான். ஆனால் அதன் முறை வேறு. அதிலும், எஸ்டோனியா இ-கவர்ன்மென்ட் போன்ற விஷயங்களில் மூத்த குடி. அதையே அசைத்து பார்த்தது இந்த சைபர் வார். அசைந்தும் போனார்கள் (எழுந்தது வேறு விஷயம்).
டிஜிட்டல் அரசாங்கம் நடத்துவதில் எல்லா நாடும், நீ நான் என்று அடித்து கொள்ளும் நல்ல நேரம். இப்படி எல்லாம் நடந்தால், டிஜிட்டலில் சீன் காட்டியது போதும், நம் தாத்தன் பாட்டன் செய்தது போல பேப்பர் அரசாங்கம் நடத்துவோம் என்று அறிக்கை வந்தாலும் வரும்.
Monday, May 07, 2007
டேய்
இப்படி ஒரு விஷயம் சாத்தியம் தானா? வெகு ஜனங்களை அடையாமல், இன்னமும் பரிசோதனை கட்டத்தில், சில பேரின் பேச்சு வார்த்தையில் மட்டுமே இருக்கிறது டேய். 1950ல் யாரும் வருங்காலத்தில் (1999) பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் ஒரே வகை பண விஷயத்தை பயன்படுத்தும் என நினைத்திருந்திருக்க வாய்ப்பில்லை. அது போல, இது இருக்கும் என திட்டவட்டமாக சொல்ல முடியாது. ஒரு கம்பெனியை இன்னொரு கம்பெனியுடன் இணைப்பதற்கே, வருடகணக்கில் ரூம் போட்டு விவாதிக்கிறார்கள். இது என்ன சாதாரண விஷயமா? இது நடப்பதாக இருந்தால், அந்த நேரத்தில், ராகுல் காந்தியின் பையன், உத்திர பிரதேச காங்கிரஸ் கூட்டத்தில் எதிர் கட்சியின் வாய்க்கு அவல் போட்டு கொண்டிருப்பார். அத்தனை காலம் எடுக்கலாம்.
இது நடந்து விட்டால், இன்று போல் இல்லாமல், விதேசிகள் எக்ஸேஞ் ரேட் முகத்தில் முழிக்காமல் தினம் காலை மனைவி முகம் முழிக்கலாம்.
-- படித்ததும் எழுத தோன்றியது, இதன் நம்பகத்தன்மையை ஆராயவில்லை--
Sunday, May 06, 2007
என்ன தீடீர்னு இந்த பணிவு?
ஏன்னா நானும் கடவுள்.
நெனச்சேன் எங்கயாச்சும் ஹூக் இருக்கனுமே....
A. Ars, you are a good man.
So are you.
ha, you are a last word freak man.
...
ஹாய் மதன் வாரா வாரம் புதிதாக எழுதப்பட்டாலும் போர் அடிக்கிறது. அன்பே சிவம் அரத பழசானாலும், எப்போது பார்த்தாலும், பழைய வாடை இல்லை.
Tuesday, May 01, 2007
Yosemite
பார்க் என்றாலே, நம்ம ஊர் நடேசன் பார்க்கும், பனகல் பார்க்கும் தான் நியாபகம் வரும். வேலி போட்டு, உள்ளே சிமென்ட் பென்ச், அதில் பாட்டி தாத்தாக்கள், தோழி தோழர்கள் என நடந்தும் உட்கார்ந்தும் இருக்கும் ஒரு இடமாகவே மனதில் பதிந்து விட்டது. யோஸ்மிட்டி பார்க், இதை விட கொஞ்சம் பெரிதாக இருக்கும் என நினைத்தால், நினைப்பில் விழுந்தது பெரிய பாலைவன மண்.
வண்டியை சான் பிரான்ஸிஸ்கோவில் இருந்து ஒட்டினோம். 4 மணி நேரம். வண்டி ஒட்ட தெரியாமல் இருந்தது நல்லதாக பட்டது. அத்தனை அழகு போகும் வழி. நிறுத்தி நிறுத்தி போனால், யோஸ்மிட்டி போக 10 நாட்களாவது ஆகும். இயற்கையை சிதைக்காமல், சாலை வழி போட்டிருக்கிறார்கள்.Monday, April 30, 2007
Sunday, April 22, 2007
Houston, we have a problem
விண்வெளி மற்றும் அது சம்மந்தபட்ட விஷயங்கள் அங்கங்கே வந்தாலும் 'அட போங்கப்பா' என சொல்லவைக்கவில்லை. நமக்கே மேலே இருப்பவர்களை கீழே கொண்டு வர நாசாவில் நாமும் இருந்திருக்க மாட்டோமா என ஏங்க வைக்கிறார்கள்.
நடித்தவர்கள் அத்தனை பேரையும் டென்ஷன் டென்ஷன், ஒரே டென்ஷனப்பா டென்ஷன் என உலாத்தி விட்டிருக்கிறார்கள். ஒவ்வொருவரும் கிலோ கணக்கில் நடித்திருக்கிறார்கள். எனக்கு பிடித்தது Ed Harris (role - Gene Kranz). வாங்கிய காசுக்கு மேலாகவே நடித்து விட்டாரோ. அவருக்கு டயலாக் கொடுத்தவர், அவர் பங்குக்கு வெளுத்து வாங்கியிருக்கிறார் (வசனம் கொஞ்சமாக இருந்தாலும்). எழுதிய கோடில் பிரச்சினை வந்தாலே குய்யோ முய்யோ என அலறும் இடத்தில் இருந்து கொண்டு, நாசாவில் பிரச்சினை தீர்க்கும் இவரை பார்த்தால் (நடிப்பு தான், இருந்தாலும் அவர் நடித்திருப்பது ஒரு நிஜ மனிதரை) சரி, இப்படி ஒரு நாள் இருந்து பார்க்க தோன்றுகிறது. இவரின் சில வசனங்கள்,
"We've never lost an American in space, we're sure as hell not gonna lose one on my watch! Failure is not an option."
"Let's work the problem people. Let's not make things worse by guessing. "
"I don't care about what anything was DESIGNED to do, I care about what it CAN do."
"Goddammit! I don't want another ESTIMATE! I want procedures! NOW! "
(உபயம் - Wikiquote)
டாம் ஹேங்ஸுக்கு, யாராவது, ஒரு படத்திலாவது சுமாராக நடிக்க சொல்லி கொடுத்தால் நன்றாக இருக்கும். நடிக்கும் எல்லா படத்திலும் அசத்தலாக நடித்து producer வயிற்றில் பாலை வார்த்து கொண்டே இருக்கிறார்.
ரோன் ஹோவர்ட் படங்கள் அதிகம் பார்த்ததில்லை. இது மூன்றாவது (A Beautiful Mind, Da Vinci Code). மூன்றுமே தழுவி எடுக்கபட்ட படங்கள். ஆஸ்கார் வாங்கி (for 'A Beautiful Mind'), என்னோட படம் எது வந்தாலும் கண்டிப்பாக பார்க்கலாம் என்று உத்திரவாதம் கொடுக்கிறார். டான் ப்ரவுனின் அடுத்த நாவல் Angels & Demons எடுக்க போகிறார் போல.
எங்களுடையது வெற்றியடைந்த தோல்வி என முடிக்கிறார்கள். நிஜத்திலும் இது ஒரு அக்மார்க் வெற்றி. ஒரு அழுத்தமான திரை பதிவு.
Friday, April 20, 2007
அந்த நாள்
Thursday, April 19, 2007
மரிகொழுந்தே மதுர மல்லிகை பூவே..
இந்த வடிவேல் கணேஷ் மற்றும் அவரின் நாட்டுபுற பாடலும் நிஜத்திலும் அசத்தல். கிண்டலும், கேலியும், பரிதாபமும் கலந்தே பல காமெடி இருக்கும் நேரத்தில், பாட்டாலும் நடனத்தாலும் (சில சங்கடபடுத்தினாலும்) நம்மை சில நிமிடங்கள் சிரிக்க வைக்கிறார். இப்படி ஒரு நாட்டுபுற பாடலை சமீபத்தில் கேட்ட ஞாபகம் இல்லவே இல்லை. இத்தனைக்கும் இது இவருடைய சொந்த சரக்கு. வடிவேலும் கூட ஜோதியில் ஐக்கியமாகிறார். கல்லூரி தினத்தில் மேடையில் இப்படி பாட, கீழே நம் இளவட்டங்கள் தப்பாட்டம் போடும் காட்சிகள் சட்டென சொடக்கிவிட்டு போனது.
...ஆமா ராசா ஆமா ராசா ஆமா ராசா...
Forward
கணிணி கனவாண்களே
கொஞ்சம் செவி கொடுங்கள்
இங்கே சில பேர் உங்களுக்காக
காத்து கொண்டிருக்கிறார்கள்.
இவன்(ள்) எங்க கிட்ட சிரிச்சு பேசியே பல நாளாகுது
உன் அப்பா, அம்மா இப்படி.
நாம பீச் எப்போ கடைசியா போனோம்னு மறந்தே போச்சு
உன் மனைவி.
அப்பா, நீ என் கூட வெளயாட வர வேண்டாம், என்க்கு சாதமாச்சும் ஊட்டி விடறயா
உன் மகனோ மகளோ
இத்தனையும் நீயாக இழந்ததா
இல்லை இழக்க பட்டதா?
கணிணி அதிகம் கலக்காத சில பேர் சொல்லுவதை கேள்.
தினமும் 8 மணி நேர கணிணி கலவி போதும்.
விட்டு விடுதலை பெறு, கணிணியும் இளைப்பாரட்டும்.
ஸ்மைலியில் மட்டுமே சிரிக்காமல்
உதடுகளில் சிரிப்பதை
உனக்குள் தேடியெடு.
யாகு மெஸஞ்சரில் காதல் செய்யாமல்
புல்வெளிகளில் காதல் செய்.
ஒரு முறையாவது இன்லேன்ட் லெட்டரில்
நண்பனுக்கு கடிதம் போடு.
ஈ-புக் தேடாமல்
பேப்பர் புக் தேடு.
கூகுள் துணையில்லாமல்
வேலை செய்ய பழகு.
மேட்ரிமோனியலில் ஜாதக பொருத்தம் பார்ப்பதை நிறுத்தி
உன் குடும்ப ஆஸ்தான ஜோஸியருக்கு கொஞ்சம் வேலை கொடு.
வெப் கேம் துணையில்லாமல்
நேரில் உன் துணையிடம் களி.
டவுன்லோட் செய்யாமல்
திரைபடம் பார்த்து பழகு.
வாரத்தில் ஒரு நாளாவது கணிணிக்கு
விரதம் அனுஷ்டித்து விடு.
வாழ்க்கை வெறுத்திருக்கும் உன் பக்கத்து வீட்டு
நூலகரை சந்தோஷபடுத்து.
மாதத்தில் ஒரு முறை
மளிகை கடைக்கு செல்
இன்டர் நெட்டில் ஆர்டர் செய்யாமல்.
கொஞ்சம் கொஞ்சமாக
இறந்து கொண்டிருக்கும்
செய்திதாள்களுக்கு உயிர் கொடு.
தினமும் ஒரு
பூ பார்த்து பழகு.
காலை சூரியனுக்கு
குட் மார்னிங் சொல்லி
கண் காத்து கொள்.
ஜிம்மில் மட்டும் உடல்வளைக்காமல்
சமையல் அறையில்
மனைவிக்கோ அம்மாவிற்கோ
பாத்திரம் கழுவி, காய் கறி வெட்டி கொடு.
இன்டர்நெட்டுக்கு அப்பால்
ஒரு நந்தவனம் பூத்து குலுங்குவது
தெரிய சாத்தியம் இல்லை தான்.
திருவிணையாக்குவது முயற்சி மட்டுமே
முயன்று பார்.
கணிணி நம் குழந்தைகள் விளையாடும் பலூன் போல
அளவாக ஊதி, அழகாக பாதுகாக்கலாம்.
பலவை உதைத்தாலும், சில விஷயங்கள் சரி தானோ?
Monday, April 16, 2007
Yuri Gagarin
இப்போது சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் மராத்தான் ஒடி கொண்டிருப்பதை, அட இவ்வளவு தானா என நிறைய பேர் நினைப்பதில் ஆச்சரியமில்லை. சம்மருக்கு குளிர் பிரதேசங்களுக்கு போவதெல்லாம் அலுத்து விட்டது. நேராக வான்வெளிதான், இப்போதைய பணம் படைத்தவர்கள்.
1961, மனிதர்கள் பூமிக்கு அப்பால் என்ன என்பதை குறு குறுவென யோசித்து கொண்டிருந்த கால கட்டம். ரஷ்யா, சில மிருகங்களை அனுப்பி பரிசோதித்தது எல்லாம் போதும், அடுத்த கட்டம் மனிதன் தான் என முடிவெடுத்த வருடம். இவர், பூமியை தாண்டி எட்டி சென்று நம் உலக உருண்டையை, உருண்டையாக முதலில் பார்த்த முதல் மனிதன். சாதாரண மனிதன் கண்டம் விட்டு கண்டம் தாண்டினாலே ஜென்ம சாபல்யம் என்று நினைத்த காலத்தில், இவரை எல்லாம் ரஷ்யா தலை மேல் வைத்து கொண்டாடியது தவறே இல்லை. ஒரு ஊருக்கே இவர் பெயர், விண்வெளியின் கொலம்பஸ் என்ற பட்டம், இப்படி பல.
சூரியன்
குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின் ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...
-
காதல் என்றால் கனவு மட்டுமல்ல, கடமை என்று நினைத்திருந்த காலங்களில் மனபாடம் செய்து வைத்திருந்த விஷயம் கீழே இருப்பது. தாஜ் மகால், இதற்கு பின் ப...
-
(கொஞ்சமே (பெரிதாகிவிட்ட)சிறுகதை முயற்சி) ஆடி மாதத்திலும் அந்த கல்யாண மண்டபம் களை கட்டியிருந்தது. கல்யாண களை தான். எல்லாம் ரகுவின் பிடிவாத தன...
-
யாரிது என்று சிலரை பற்றியே நமக்கு தெரிந்து கொள்ள தோன்றும். Google அவர்களுடைய லோகோவை ஏப்ரல் 12 அன்று இவருக்காக மாற்றியபோது, விக்கிபீடியா உ...

