அது என்ன எட்டயபுரத்தில் மட்டும்
ஒருத்திக்கு நெருப்பை சுமந்த கருப்பை
கல்லூரி நாட்களில் தமிழ் நூலில் வந்த வைரமுத்துவின் வரிகள். அந்த நெருப்பிடம் மனம் பறி கொடுத்தோர் பலர். இன்றும் பலர்.
பாரதி
உனக்கு மரணத்தின் பின்னும்
கேட்கும் திறம் உண்டு என்பதனால்
நீ விரும்பிய அனைத்தும்
இக்கணம் கிடைக்கும்
நீ கனவு கண்ட
அத்தனையும் கைக்கு எட்டிய தூரத்தில்
உன் முயற்சி எதுவும்
விழலுக்கு இறைத்த நீராகி விடவில்லை
ஆனால்...
இவை எல்லாம்
நீ நினைத்தது
நீ கனா கண்டது
நீ முயற்சித்தது
என்று எங்கள் சந்ததிகளுக்கு
நாங்கள் சொல்ல எங்களுக்கு
நேரமில்லை
அரசாங்கத்துக்கும்
நேரமில்லை
உன்னை மறுபடியும்
பிறக்க சொல்லி
பாட சொல்லி
நாங்கள் வற்புறுத்த போவதில்லை
ஆனால்,
நாங்கள் வற்புறுத்துவது
மறுபடியும் பிறந்து விடாதே என்று தான்
அப்படியும் வந்தால்
நீ பாடம் சொல்ல
உன் அறிவுரைகள் கேட்க
உன் தீ பிழம்பு கண்கள் பார்க்க
உன் வார்த்தை ஜாலங்கள் மகிழ
இளமை கொதிக்கும் நாங்கள்
நீ பிறந்த இடத்தில் இல்லை
முடிந்தால்
டெக்சாசிலோ, மிசிசிபியிலோ,
நியு ஜெர்சியிலோ, கலிபோர்னியாவிலோ
பிறந்து கொள்.
ஏன் இறந்தாய் பாரதி?
Sunday, December 10, 2006
Subscribe to:
Post Comments (Atom)
சூரியன்
குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின் ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...
-
காதல் என்றால் கனவு மட்டுமல்ல, கடமை என்று நினைத்திருந்த காலங்களில் மனபாடம் செய்து வைத்திருந்த விஷயம் கீழே இருப்பது. தாஜ் மகால், இதற்கு பின் ப...
-
(கொஞ்சமே (பெரிதாகிவிட்ட)சிறுகதை முயற்சி) ஆடி மாதத்திலும் அந்த கல்யாண மண்டபம் களை கட்டியிருந்தது. கல்யாண களை தான். எல்லாம் ரகுவின் பிடிவாத தன...
-
யாரிது என்று சிலரை பற்றியே நமக்கு தெரிந்து கொள்ள தோன்றும். Google அவர்களுடைய லோகோவை ஏப்ரல் 12 அன்று இவருக்காக மாற்றியபோது, விக்கிபீடியா உ...
2 comments:
Romba nalla eruku nanba. just crystal clear nice.
-a
Nandri - Thanks!!!
- Lakshman
Post a Comment