Saturday, March 11, 2006

agara mudhala...

இந்த வலை பக்கதிலாவது அடிக்கடி எழுதுவேனா? தெரியவில்லை? ஆனால், முயற்சி செய்யலாம் என்று ஒரு முடிவு.

தமிழ் மேல் எப்போதும் ஒரு ஈர்ப்பு. கூடவே ஒரு சகாவின் தூண்டுதல்.
தமிழ் எழுத, நான் தகுதி உடையவனா? தெரியவில்லை.

எத்தனை எத்தனை படைப்பிலக்கியங்கள். படைப்பாளிகள். நான் எம்மாத்திறம்.

பாரதி, பல மொழிகள் கற்ற மகாகவி. அவர் பேசிய தமிழ், நானும் பேசுவதில் ஒரு மகிழ்ச்சி. பலருக்குள் விதைந்துள்ள தமிழ் விருட்சம் அவர். எனக்குள்ளும். உன்னை வணங்கி என் முதல் அடி.

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...