Monday, August 08, 2022

விதி

கைகோர்த்துக்கொண்டே நடந்த 
கடற்கரையில் 
நீயும் நானும் 
பிறகென்ன 
மண் அதன் வேலையையும் 
அலை அதன் வேலையையும் 
காற்று அதன் வேலையையும்
பார்த்தது 
ஆனால் கவிக்கு தான் 
வேறெந்த வேலையும் இல்லை 
கவிதைகள் எழுதித் தள்ளிவிட்டான் 
ஆனாலும் அலைக்கு 
கோபமில்லை
அதற்கு செயல்படுவது தான் விதி 

எங்கோ
எப்படியோ 
இருந்திருக்க வேண்டியவன் நான் 
இப்போது 
எப்படியோ 
இருக்கிறேன்
இருந்திருக்கலாம் 
ரு எப்போதாவது ற வாக மாறும் 
காத்திருப்போம்

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...