Wednesday, August 05, 2020

எதிரி

உயிர் நண்பன் 
விதிவிலக்காக 
ஒரு நாள் மட்டும் 
உன் பரம எதிரியாகிறேன் 
என்றான்.

இருந்துவிட்டுப்போ
அடுத்த நாள் மறுபடியும் 
நண்பன் தானே!! 

பரம எதிரியானான்
திட்டித்தீர்த்தான் 
பிடித்து சாக்கடையில் 
தள்ளினான் 
இனி உன் முகத்தில் 
முழித்தால் 
நான் மனிதனே இல்லை
என்றான். 

மறுநாள் வந்தான். 
நண்பா, நேற்று தான் 
புரிந்தது. 
எதிரியாக நான் 
உன்னை நன்றாக 
புரிந்துகொண்டேன்.
நீயும் என்னை 
எதிரியாகப்பார்.

பாதாள மனிதர்கள்

என்னை அழுத்தம் கொடுத்த 
அந்த மரண நொடிகளை 
தேடிக்கொண்டே இருக்கிறேன் 
திரும்ப கிடைக்காது 
என்கிறார்கள் 
கிடைத்தால் திரும்ப 
பார்க்க வேண்டும் 
எப்படி எல்லாம் 
அது என்னை 
சித்திரவதை படுத்தியது 
அதே நொடி தான் 
இன்னொருவனுக்கு சுகபோகத்தை 
தந்தது
கேட்டால் உன் நேரம் 
சரியில்லையாம்
நொடிக்கு என்ன 
ஆள் பார்த்து 
செய்கை செய்து 
வைக்கும் வேலையா 
அது நானே வரவழைத்துக்கொண்டது 

இப்போது சொல்கிறார்கள் 
பார், எல்லாம் உன்னால்தான் 

புரிகிறது 
நான் எங்கு விழுகிறேனோ 
அங்கு தான் அனைவரும் 
குடியிருந்து என்னை வரவேற்கிறார்கள்.

ஒரு நாள் அவர்கள் 
விழத்தானே போகிறார்கள் 
அப்போது நான் கயிறு 
கொண்டு வருகிறேன்.

விதை

மரம் கொஞ்சம் கூட 
சொரணை அற்றது போல 
விதையிலிருந்து தான் வந்தது 
பின் ஏன் மறுபடியும் 
விதைக்குள்ளேயே போய் 
அடைந்துகொள்கிறது 

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...