Sunday, July 26, 2020

ஞானி

வாழ்க்கைக்கென்ன தெரியப்போகிறது
இன்று, இப்பொழுது
நிம்மதியை தரவேண்டுமா
ரோதனைகளை தரவேண்டுமா
இல்லை
விட்டேத்தியாக இருக்கவேண்டுமா என்று

அதற்கு ஒரு வேலையுமில்லை
நான் போகும் பாதையில்
அதுவும் கூட வருகிறது
வழுக்கி விழுந்தால்
எழும் வரை
காத்திருக்கிறது

வெடித்து சிரித்தால்
பொறுமையாக பார்க்கிறது

அழுது தீர்த்தால்
எப்போது முடிப்பேன்
என கன்னத்தில்
கைவைத்து தேவுடு
காக்கிறது

என்னமோ போகட்டும்
இந்த வாழ்க்கை
எதற்கு தான்
கூட வருகிறதோ

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...