Sunday, March 02, 2008

வாத்தியார்

கொஞ்ச நாளாய் தமிழ் தெரிந்தவர்களிடம் எல்லாம் ‘சுஜாதா இறந்துட்டாரே தெரியுமா' என்று கேட்டபடிக்கே இருந்தேன். சொன்னவர்கள் அத்தனை பேரும் சுஜாதாவை ஏதோ ஒரு ரூபத்தில் பரிச்சயபடுத்திக்கொண்டு இருந்தார்கள். ஒருவர் கரையெல்லாம் செண்பகப்பூ சொல்ல, இன்னொருவர் ரோபோ பற்றி சொல்ல, மற்றொறுவர் நகரம் பற்றி சொல்ல, எங்கும் பாரபட்சமில்லாமல் நிறைந்திருந்தார்.

எனக்கு முதன் முதலில் சுஜாதாவை அறிமுகபடுத்தியது, அப்பா. அப்போது வந்திருந்த ரத்தம் ஒரே நிறம் தொடர். வாரபத்திரிக்கையில் வந்த தொடரை எல்லாம் மொத்தமாக பைண்ட் செய்து வைத்திருந்தார். படிக்கும்போது கிட்டதட்ட 14 வயதிருக்கும். வெறும் ஆனந்த விகடன் படித்த நேரத்தில் முதல் நாவலாக படித்தது இந்த ரத்தம் ஒரே நிறம். அப்போதைய படித்ததின் மனநிலை இப்போதைக்கு நியாபகம் இல்லை. இருந்தாலும், அப்பாவின் TVS Champன் மீது உட்கார்ந்து கொண்டு ஆடிகொண்டே பல மணி நேரம் படித்தது நிழலாடுகிறது. சுஜாதா ஈர்ப்புவிசை அப்போது ஆரம்பித்தது. பிறகு நீண்ட காலம் தொடரவெல்லாம் இல்லை. ஆனால் சுஜாதா என்ற அறிமுகம் இருந்தது.

பிறகெல்லாம் எல்லாரும் போல நானும் கற்றதும் பெற்றதும், சீரங்கத்து தேவதைகள், சில சிறுகதைகள், சில நாவல்கள் படித்ததுண்டு.
எந்த வார்த்தையிலும் அல்லது படைப்பிலும் மிதமிஞ்சிய செண்டிமெண்ட் இருக்காது. எதையுமே maturedஆக பார்க்கும் ஒரு எழுத்து. இவரின் எழுத்துக்களில் பெரிதாய் மேதாவித்தனம் இருக்காது. ஆனால், அதை லேசாக தொட்டுவிட்டு போகும் பலம் இவருக்கு உண்டு.
வைரமுத்துவில் தொடங்கிய என் மெலிதான புத்தக பழக்கம், அடுத்ததாக நகர்ந்தது இவரின் பக்கம் தான். சுற்றி சுற்றி எல்லாரும் இவரையே பரிந்துரை செய்தால் வேறேன்ன செய்துவிட முடியும்.
ஓரளவுக்கு விபரம் தெரிந்த நேரத்தில் நான் படித்தது “ஆ” நாவல். இதன் ஆதாரம் எல்லாம் ஒரு சின்ன வியாதி. மூளைக்குள் நடக்கும் சில விஷயங்கள். ஒரு எழுத்தாளராக இவருக்கு அதில் இருந்த கதைக்களன் இது மட்டுமே. அதன் அறிவியலை விளக்காமல், கதையோடு கொஞ்சம் கொஞ்சமாய் ஒட்டி வெட்டி பரபரப்பு கூட்டி இருப்பார். அதன் பிறகு, இவரின் எந்த நாவலாக இருந்தாலும் வேண்டாம் என்று சொல்லாமல் படித்திருக்கிறேன்.
கமல், அவரின் சுஜாதா இரங்கலில் சொல்லி இருந்த விஷயம் சத்தியமானதாக பட்டது. சினிமாவில் சுஜாதா, என்பது ஒரு சமரசம் மட்டுமே. எழுத்தில் இருந்த அத்தனை பட்டாசுகளும் திரையில் வெளிபட்டதாக எனக்கு தெரியவில்லை. சில படங்களை பார்த்த பின்பு, இது சுஜாதா என்று சொன்னபின்பே தெரிந்தது. இவருக்கான களம் இல்லை சினிமா, எனக்கு தெரிந்தவரை. அல்லது, இவருக்கு தீனி போடும் அளவுக்கு நம் சினிமா இன்னமும் நகர்ந்து விடவில்லை.
எழுத்தாளனுக்கு எப்போதும் தேவை கவனம். ஒவ்வொரு விஷயமும் கவனிக்கபட்டால் மட்டுமே எழுத்தாக்க முடியும். இந்த பதிவாளரின் சுஜாதா பற்றிய பதிவு அதை தெளிவாக சொல்லும்.
அவரின் உடல்நிலை சரியில்லாத விஷயத்தையே நகைச்சுவையாக சொன்ன மனிதர் இவர். ரொம்ப கஷ்டப்படாமல் சுவாசம் நிறுத்தி இருப்பார்.
மரணித்தவர்கள் ஒரே ஒரு முறை எழுத ஒரு வாய்ப்பு அமைக்கபட்டிருந்தால், இவருக்கு அந்த வாய்ப்பு கொடுக்கபட்டு எழுதப்படும் அந்த இரண்டு பக்க கட்டுரை படிக்க கண்டிப்பாக ஆவலாயிருப்பேன். இவரை விட மரணத்தையும் போகிற போக்கில் சொல்லிவிட யாராலும் முடியாது.

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...