Thursday, October 31, 2019

என்றென்றும்!!!

இன்னொரு ஜென்மமுன்டெனில்
அது ஒரு நொடி
மட்டுமிருந்தால் போதும்,

‘தாலாட்டு கேட்க நானும்
எத்தனை நாள் காத்திருந்தேன்’

வார்த்தைகளை என்
முன் ஜென்மத்து
கருப்பசாமி
வாயில் இருந்து கேட்க!!!

Monday, October 28, 2019

நீ பிழைத்திருக்க வேண்டுமே...

பத்தடியில் உன்னை பார்த்த
உன் கிராமத்து மனிதனை
உன் ஓலத்துடன்
இருக்க வைத்திருக்கிறாய்

இருவதடியில்
உன் இரு கைகளை
பிடிக்க நினைத்த
கயிறை பிடித்திருந்த
சித்தப்பனை பைத்தியமாக்கி இருக்கிறாய்

முப்பத்தடியில்
உனக்கு தெரிவதெல்லாம்
மண்ணும் தூசியும்
என புரிந்த உள்ளூர்காரனை
பித்தனாக்கி இருக்கிறாய்

நாற்பதடியில்
உனக்கு பசித்திருக்குமே
கொடுக்க நீ விரும்பிய
தோசை கூட கொடுக்க வழி இல்லையே
என கழிவிரக்கம் கொண்ட
பாட்டி இன்னும் மயங்கி கிடக்கிறாளே

ஐம்பதடியில்
நீ விளையாட நினைத்த
வானவில் நிறத்து பொம்மை
வந்து நின்று காப்பாற்றும் என
நீ நினைப்பாய் என நினைத்த
பக்கத்து வீட்டு மாமாவை
நிலை கொள்ள வைத்திருக்கிறாய்

அறுவதடியில்
தண்ணீர் தவித்த நாவினில்
ஒரு துளி தண்ணீரை
தொட்டு வைக்க நினைத்த
உன் இன்னொரு இரண்டு வயது கூட்டாளி
அழுது கொண்டிருக்கிறானே

அப்படியே
நூறடியில் நீ இருக்கும்போதும்
சொன்னாளே அவள்
அவனுக்கு வேர்க்குமே...
அடுத்த நொடியில் அவளுக்கு வேர்த்து
இந்த நொடியில் எழுந்தாளே

யாருக்கு தெரிந்திருக்க முடியும்
27ம் அடியிலேயே
நீ
ம்மா, தூக்கு என்றதை... 

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...