Wednesday, August 05, 2020

எதிரி

உயிர் நண்பன் 
விதிவிலக்காக 
ஒரு நாள் மட்டும் 
உன் பரம எதிரியாகிறேன் 
என்றான்.

இருந்துவிட்டுப்போ
அடுத்த நாள் மறுபடியும் 
நண்பன் தானே!! 

பரம எதிரியானான்
திட்டித்தீர்த்தான் 
பிடித்து சாக்கடையில் 
தள்ளினான் 
இனி உன் முகத்தில் 
முழித்தால் 
நான் மனிதனே இல்லை
என்றான். 

மறுநாள் வந்தான். 
நண்பா, நேற்று தான் 
புரிந்தது. 
எதிரியாக நான் 
உன்னை நன்றாக 
புரிந்துகொண்டேன்.
நீயும் என்னை 
எதிரியாகப்பார்.

No comments:

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...