Tuesday, January 23, 2007

Yahoo

இங்கே, இப்படி ஒரு கேள்வி கேட்கப்பட்டுள்ளது, இரண்டு வாரத்திற்கு முன்பு. இதை கேட்டவர் மிக பிரபலம் என்பதால் சற்றே சூடும் பிடித்துள்ளது. நான் பார்க்கும் போது 15767 பதில்கள் சொல்லப்பட்டுள்ளது. ஆச்சரியம் தான்.

இதை நம் ஜனாதிபதி படிப்பார், அவசியம் அதை செயல்படுத்துவார் என்ற நம்பிக்கை பலருள் இருக்கும் போல தான் உள்ளது. செயல் படுத்த கூடிய மனிதர் தான் அவர். ஆனால், தனி ஆளாக, அவரின் உணர்வு மட்டும் அதை செய்து விடாது. உலகத்தின் அத்தனை மனங்களும் இணைய வேண்டிய அவசியம் இருக்கிறது.

அவர் கேட்பது போல் இது முற்றிலும் தவிர்க்கபட்டு விட கூடிய விஷயம் தானா இது? நாம் எத்தனை தான், டெஸ்டிங் செய்தாலும் எங்கிருந்தோ வந்து விடும் ப்ரோகிராம் பக் போல தான் இதுவும். நம்மால் செய்ய முடிபவை அத்தனையும் செய்தாலும், எங்கோ ஒரு முலையில் இதன் மவுன மூச்சு இருந்து கொண்டு தான் இருக்கும். அதன் கடைசி மூச்சை நிறுத்துவதற்கு பெரும் காலம் கண்டிப்பாக பிடிக்கும். அதற்கான முயற்ச்சிகள் அரசாங்கத்திடம் மட்டும் இல்லாமல், இது போன்று பொது மக்களிடமும் ஏற்பட்டால், அந்த காலம் வெகு தொலைவில் இல்லை. மக்களிடம் அதை கொண்டு செல்லும் சரியான ஒரு வழி இது.

இணையம், ஷில்பா ஷெட்டி மற்றும் ஜேட் கூடி வீடியோ பார்ப்பதற்கு மட்டுமில்லை, இதற்கும் தான் என்று கூறும் நல்ல முயற்சி.

இன்னமும் 5 நாட்கள் தான் உள்ளது. நம்மால் முடிந்ததை செய்வோமே!!!

No comments:

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...