Wednesday, February 14, 2007

பூவின் மொழி மணமா, நிறமா

இது என்ன, இசை வெளியீட்டு விழாவா, இல்லை, வெள்ளி விழாவா என்ற சந்தேகமே வந்தது, இந்த வீடியோ பார்க்கும்போது.

எனக்குள் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாக இருந்தது தமிழ் சினிமா. இப்போது அது கொஞ்சம் மாறி சினிமா மட்டுமாக உள்ளது. மற்ற உலக சினிமாக்களை பார்க்கும் போது, 'அட, நம்ம ஆளுங்க எப்போ இதெல்லாம் எடுக்க போறாங்க' என்று தோன்றும். மிக சிறிய கால கட்டத்திலேயே, இந்த உலக சினிமா எல்லாம் தமிழ் சினிமாவை மறக்கடித்தது. இப்படி இருந்தபோது தான், ஆனந்த விகடன் என்று நியாபகம். ஜோதிகா பேட்டி, மொழி படத்தை கண்டிப்பாக முடித்து கொடுத்து விட்டேன். இது என் வாழ்வில் மறக்க முடியாத படம் என்றார். கூடவே பலவையும் சொல்லியிருந்தார். சரி, வழக்கமாக எல்லாரும் சொல்வது தானே என்று நினைத்தேன். ஆனாலும், ஏதோ ஒன்று, இந்த ராதா மோகனும், பிரகாஷ் ராஜ்ம் ஏமாற்ற மாட்டார்கள் என்ற எண்ணம்.

அப்படித்தான் இருக்கும் போல என்பது போல், இந்த இசை வெளியீட்டு விழா. வழக்கம் போல இசையை கொஞ்சமாக பேசி, மற்றவற்றை அதிகம் பேசினார்கள். ஈர்த்தது கனிமொழியும், வைரமுத்துவும். மாறுபட்ட சினிமா என்றார்கள். இப்போது வரும் எல்லா சினிமாவையும் அதை உருவாக்குபவர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள். அதையும் மீறிய பலவற்றை இவர்கள் கூற தவறவில்லை. பார்த்தால் உங்களுக்கே தெரியும். வைரமுத்து, எப்போதும் போல, உணர்ச்சியை உருக்கி, தமிழை பரப்பி பேசினார். பல நேரங்களில் அது அலுப்பே தட்டும், ஆனால், இதில் அல்ல. ஜோதிகா பாவம், கொஞ்சம் (கொஞ்சம் என்ன நிறையவே) நெகிழ்ந்தும், நெளிந்தும் இருப்பார்.

மொத்தத்தில், மொழி, நான் பல நாட்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் தமிழ் சினிமா. இந்த படம், மசாலா நெடியை கொஞ்ச நாளைக்கு நிறுத்தும் என்ற நம்பிக்கையில் ஒரு பழைய தமிழ் சினிமா ரசிகன்.

No comments:

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...