பார்க் என்றாலே, நம்ம ஊர் நடேசன் பார்க்கும், பனகல் பார்க்கும் தான் நியாபகம் வரும். வேலி போட்டு, உள்ளே சிமென்ட் பென்ச், அதில் பாட்டி தாத்தாக்கள், தோழி தோழர்கள் என நடந்தும் உட்கார்ந்தும் இருக்கும் ஒரு இடமாகவே மனதில் பதிந்து விட்டது. யோஸ்மிட்டி பார்க், இதை விட கொஞ்சம் பெரிதாக இருக்கும் என நினைத்தால், நினைப்பில் விழுந்தது பெரிய பாலைவன மண்.
வண்டியை சான் பிரான்ஸிஸ்கோவில் இருந்து ஒட்டினோம். 4 மணி நேரம். வண்டி ஒட்ட தெரியாமல் இருந்தது நல்லதாக பட்டது. அத்தனை அழகு போகும் வழி. நிறுத்தி நிறுத்தி போனால், யோஸ்மிட்டி போக 10 நாட்களாவது ஆகும். இயற்கையை சிதைக்காமல், சாலை வழி போட்டிருக்கிறார்கள்.எந்த சீசனுக்கு வேண்டுமானால் வாருங்கள், நாங்கள் உங்களுக்காக புதிதாக இருப்போம் என இயற்கை உத்திரவாதம் கொடுக்கிறது.
இதயம் சீராக துடிக்க இது போன்ற சில பயணங்கள் தேவை.
[படங்கள் எல்லாம் நெட்டில் சுட்டது இல்லை. சொந்த செலவில் இல்லாமல், நண்பனிடம் ஓசியில் வாங்கிய கேமராவில் கிளிக்கியது]
3 comments:
When you told me that u visited a national park, I thought....
Good snaps.
"இயற்கை என்னும் இளைய கன்னி"
amam nanba,
Chennai eppo namma oorachu,namakku ennaikum sontha oorthan namma ooru... :-)
Vj
Sri -
இயற்கை is definitely a இளைய கன்னி. She attracts!!!
Keep writing on cacographies.
Vj -
enna thaan, vellore oru maathiriya sontha voora irunthaalum, chennai thaan oru global point of view'la namma voorunu solla mudiyuthu.. athaan.
Post a Comment