நண்பரிடம் ஓசி வாங்கி படித்தேன். இதன் ஆசிரியர் எஸ். ராமகிருஷ்ணன் இப்பொழுது நட்ச்சத்திர எழுத்தாளர். அது மட்டுமல்ல, சுகானுபவ எழுத்துக்கு சொந்தகாரரும் கூட. கற்பனை எழுத்துக்கு இவர் கொஞ்சம் முக்கிய இடம் கொடுக்கிறார். ஆனால் அந்த கற்பனை கூட, சம கால அனுபவத்தை வைத்து சொல்லும் கதை சொல்லி.
நண்பர் இதை கொடுக்கும் போது, பர பரன்னு படிக்காதிங்க. அப்புறம் புரியாது. எனக்கு என்னமோ இந்த ஜிரோ டிகிரி மாதிரி இருக்க போகிறது என்று நினைத்தேன். நல்ல வேளை, அப்படி எதுவும் இல்லை. சாமானிய நாலு நண்பர்கள் பற்றிய கதை. ஒருவன் இறந்து போகிறான். பிறரின் நினைவலைகளும், அந்த இறந்த நண்பனின் நீண்ட நெடும் பழைய சம்பவங்கள்.
கதை இக்காலத்துக்கும், அக்காலத்துக்கும் தாவுகிறது. ஆனால் படிக்கும் அந்த ஓட்டம் தடைபடவில்லை. அவரின் பயண அனுபவங்களை அள்ளி தெளித்திருக்கிறார். அதே நேரத்தில் சம்பத் என்னும் அவருடைய நாயகன் தான் உறுபசி முழுவதும் வியாபித்து இருக்கிறார், அவர் கதையின் ஆரம்பத்திலேயே இறந்து போனாலும். எஸ் ரா சம்பத்தை ஒரு வித்தியாசமான நபராகவும், அதே நேரத்தில், சுப்பர் சுப்புவாகவும் காட்டவில்லை. இளமையில் அலை கழிக்கபட்ட சில பேரில் இவனும் ஒருவன். இவனை பிடித்தோ பிடிக்காமலோ உடன் இருந்த 3 நண்பர்கள். அவர்களின் எண்ண ஊற்றுக்கள்.
மொத்ததில் ஒரு நல்ல கதை படித்த திருப்தி, ஓசியில்.
Saturday, July 22, 2006
Subscribe to:
Post Comments (Atom)
சூரியன்
குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின் ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...
-
பேய் பசி அன்று. அரக்க பரக்க fridge துழாவியதில், பார்த்து இளித்தது நேற்றைய ரசம். எதை செய்தாலும் மெகாவாக செய்து பழக்கமாகிவிட்டதால், இன்னமும் ...
-
குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின் ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...
-
அரண்மனையில் ஒரே குழப்பம் பரிசில் பெறப்போவது எந்தக் கவிதை? அனைத்திலும் சிறந்த கவிதை பேசாமலேயே இருந்தது மேலோட்டத்தில் இருந்த ஒன்று சிறு சலனத்த...
2 comments:
:-) Good.
Pl. register ur blog in thenkoodu.com & thamizmanam.com
Thanks Thala.
Post a Comment