Friday, February 09, 2007

காதல் என்றால் கனவு மட்டுமல்ல, கடமை என்று நினைத்திருந்த காலங்களில் மனபாடம் செய்து வைத்திருந்த விஷயம் கீழே இருப்பது.

தாஜ் மகால், இதற்கு பின் பல கதைகள். இதோ இன்னுமொரு கதை. நீங்கள் கண்டிப்பாக கவனித்திருக்க வேண்டும். நடுவில் சமாதி, அதன் மேல் அழகு மிளிரும் பளிங்கு மண்டபம். அதை சுற்றி, நான்கு பெரிய தூண்கள். இங்கு தான் விஷயமே. அதை இன்னும் கவனித்து பார்த்தால், அவை சிறிது சாய்ந்து இருக்கும், மிக துல்லியமான சாய்வு. இது ஷாஜகான், மும்தாஜ் மீது வைத்திருந்த அளவில்லா காதலை மட்டுமே சொல்கிறது. பூகம்பமோ இல்லை எதாவது இயற்கை இடர் வந்தாலும் கூட, இந்த தூண்கள் சமாதி மீது விழுந்து விடாதபடி இருக்க இந்த சாய்வு. இறந்த பின்னும் தன் காதல் மனைவிக்கு எந்தவொன்றும் ஆக கூடாது என்ற காதலனின் சரித்திர காதல்.

இன்று நினைத்தாலும் நல்ல சிரிப்பு வரும் கதை இது. அப்போதெல்லாம், அடடா இப்படி லவ் பண்ணனும்டா என்று நினைத்து கொண்டிருந்ததே காரணம். அன்று தித்தித்த விஷயம் இன்று திகட்டுகிறது. கற்பனை இல்லாமல் ஒரு காதல், இருக்க முடியுமா? வயதை பொறுத்தது என்று நினைக்கிறேன்.

இன்றும் காதலாகி கசிந்துருக பல பேர் இருக்க, பிப்ரவரி 14, படு ஜோராக உங்கள் முன் சிறிது நாட்களுக்குள். எங்கு பார்த்தாலும், காதல் தான். வசூல் ராஜா பாடல் தான் நினைவுக்கு வருகிறது.

12 வயசில் மனசில் பட்டாம்பூச்சி பறக்குமே, லவ்வில்ல அது லவ்வில்ல
கீஞ்ச பாயில் கவுந்து படுக்கும் போது மனசுக்குள்ள கவுளி கத்துமே, லவ்வில்ல அது லவ்வில்ல
...
இதுக்கு ஏன் உசிர குடுக்கனும்
...
லவ் பண்ணுடா மவனே, லவ் பண்ணுடா

பயமுறுத்தும் global warming மத்தியிலும், காதலை வைத்து வியாபாரம் பண்ணும் அனைவருக்கும் நல்ல நேரம். உங்களுக்கு எப்போதுமே வியாபரம் படுக்காது. பூமி அழிந்தாலும், செவ்வாயில் உங்களுக்காக சில காதலர்கள் காத்து கொண்டிருப்பார்கள்.

7 comments:

Sri's Cacographies said...

Very nice narration. Shows differences btwn theoretical and praxis of love.

Lakshman said...

:) :)

Thanks Friend.

Anonymous said...

Nanba,

Manusula enna Mounam Pesiyadhe first half suryannu nenapoo?? Nalla figure kidacha luv panna matta ne :-)

Vj

Lakshman said...

puriyuthu illa. appuram yen kekkara. :-)

Adiya said...

:).
enna kaadhal oda kaa va. :)

Lakshman said...

Adiya,

appadi ellam illanga. oru general vaalibanin karuththu :)

- Lakshman

Lakshman said...

Adiya,

appadi ellam illanga. oru general vaalibanin karuththu :)

- Lakshman

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...