Tuesday, February 24, 2009

A.R. ரஹ்மானும் கடவுளும்

வார இறுதியில் மூன்று படம் என சினிமா பித்து பிடித்து அலைந்தேன். நான் கடவுளில் ஆரம்பித்து, சிவா மனசுல சக்தியில் நொந்து, வெண்ணிலா கபடி குழுவில் முடித்தேன். நான் கடவுளை தவிர மற்ற இரண்டும் (எனக்கு) சோபிக்கவில்லை.

நான் கடவுளும் ரொம்ப பிடித்துபோன பகுதியில் இல்லை. 3 வருட உழைப்பு, ஆர்யாவின் மெனக்கெடல், பாலாவின் விரைப்பான இயக்கம், இவற்றையெல்லாம் மீறி என்னை இழுத்தது இளையராஜாவும் சில நிமிடங்களே வந்து போகும் காசியும்.

இளையராஜாவின் இசை இண்டு இடுக்குகளில் புகுந்து கிளர்ந்துள்ளது. பல காட்சிகளை கண்ணை மூடிக்கொண்டே பார்த்தேன். அவரின் தாண்டவத்தை மொத்தமாக உள்வாங்க ஒரே வழி இது, இல்லையெனில் காட்சிப்படுத்தலில் இருக்கும் பாலாவின் தனித்தன்மை இசையுடன் போட்டி போடும். ஓம் சிவோஹம் பாடலில் இவரின் தனி ஆவர்த்தனம், absolute Ilayaraja Brand.

ஆர்யா அல்ல, அஜித்தாக இருந்திருந்தாலும் வியக்க வைத்திருப்பார். இது முற்றிலும் பாலா படம். ருத்ரன் பாலாவின் நாயகன். முற்றிலும் சேர்ந்தமைந்த directorial film இது.

நான் எப்போதும் வியக்கும் பாலா factor இதிலும் தவறாமல் இருந்தது. பல படங்களில் hero மட்டுமே rugged ஆக இருப்பார், மிஞ்சி போனால் வில்லன். ஆனால் பாலாவின் படம் முழுவதுமே (நகைச்சுவை தவிர) rugged ஆக இருக்கும். நான் கடவுளில் இது வழக்கம்போல் கைவிடப்படவில்லை.

பூஜா தேவைதானா என மட்டுமே தோன்றியது. வியத்தகு நடிப்பு என்றெல்லாம் சொல்லிவிட முடியவில்லை. மெத்த உழைத்திருக்கிறார். ஆனால் தேவையில்லாத உழைப்பு பெரும்பாலும் எடுபடாது. அப்படி அப்படியே இருந்துள்ள பலரின் நடுவில், இவர் மட்டும் சினிமாத்தனமாய்/புகுத்தபட்ட குறைபாடுகளுடன் (வெள்ளை லென்ஸ் வகையறா) இருந்ததாக எனக்கு பட்டது.
. . .
A.R. ரஹ்மான். ஆஸ்கார் இவருக்கு கிடைத்த மிகப்பெரும் commercial வெற்றி. வாழ்த்துக்கள். சிலர் சொன்னதுபோல், Slumdog Millionare இவரின் ஆகப்பெரிய படைப்பாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. ஆனால் எந்த விதத்திலேயும் entertainment richness குறைந்த பாடல்களல்ல. ரஹ்மானின் இரவு உழைப்பில் உருவான மற்றுமொறு நல்ல படைப்பு. கொசுக்கடிக்கு மத்தியில் DTS இல்லாமல் திருடா திருடாவில் “வீரபாண்டி கோட்டையிலே” கேட்ட அனுபவத்திற்கு Jai Ho எந்த விதத்திலும் ஈடு கொடுக்கமுடியவில்லை என்பதே என் கருத்து. ஆஸ்காரையும் தாண்டி போகக்கூடிய திறமை உள்ளவர். இவருக்கு ஆஸ்கார் மற்றுமொறு விருது, அவ்வளவே.
Kodak Theater. இங்கு செல்லும் வாய்ப்பு நான் Los Angeles செல்லும்போது கிடைத்தது. உள்ளே விடவில்லை, முழுவதாய் பார்க்கவும் முடியவில்லை. ஆனாலும் பல மகானுபாவர்கள் கால்பட்ட இடம், நம்மில் ஒருவன் எப்போது மிதிக்கபோகிறானோ என்ற நினைப்பு அப்போதிருந்தது. இப்போதில்லை.
நிலை உயரும்போது சிரம் தாழும் இவரின் குணமும் இசையும் எந்த நாளும் மாறாதிருக்க எல்லா புகழும் சேர்ந்த இறைவன் அருள் புரியட்டும்.

No comments:

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...