எல்லாவற்றையும் காலம் வெகுவேகமாக பின்னுக்கு தள்ளுகிறது. காலமா, இல்லை அதற்குள் நடக்கும் நிகழ்ச்சிகள் நம்மை வேகப்படுத்துகின்றனவா தெரியவில்லை.
எதேச்சையாக கடந்த நான்கைந்து நாட்களாக சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் ஐந்தாம் பாகம் பிட்டு பிட்டாக படித்தேன். அவ்வப்போது உலாவும் பதிவுகளில் பார்த்தால் சுஜாதா பதிவுகள். பின்புதான் மரமண்டைக்கு உறைத்தது. அவர் காலமடைந்து ஒரு வருடமாகிறது. சுப்புடு, தேசிகன், நாராயணன் இவர்களின் பதிவுகள் ஓராண்டை கனத்துடன் நினைவுபடுத்தின.
தேசிகனின் பதிவு என்னமோ செய்தது. கண் முன்னே காலமெல்லாம் ரசித்த மகானுபாவர் மூச்சிழக்கும் நிமிடங்களை உள்வாங்கிகொள்ள அசாத்திய பலம் வேண்டும்.
சில வாரங்களுக்கு முன்பு ஸ்ரீரங்கம் சென்றிருந்தோம். அரங்கனையும் தாண்டி, நீண்டு உயர்ந்த கோபுரத்தையும் தாண்டி சுஜாதா மனதிற்குள் சலனமானார்.
இன்னும் சில ஆண்டுகள் வாழ்ந்திருக்கலாம். ஆனால், சமீபத்தில் என் நோயுற்ற 94 வயது தாத்தாவின் மரணம் சொன்ன விஷயம், வலி நீடித்திறா வாழ்க்கை நம் கடைசிகளை ரணம் கம்மியாய் வைத்திருக்கும்.
எந்த கணத்தையும் உணர்வையும் casual paint அடிக்கும் இவர், மரணத்தையும் just like that தள்ளியிருப்பாராக.
Subscribe to:
Post Comments (Atom)
சூரியன்
குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின் ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...
-
பேய் பசி அன்று. அரக்க பரக்க fridge துழாவியதில், பார்த்து இளித்தது நேற்றைய ரசம். எதை செய்தாலும் மெகாவாக செய்து பழக்கமாகிவிட்டதால், இன்னமும் ...
-
நான் எழுதிய அத்தனை கவிதைகளும் சிறகடித்து பறந்தன ஒரு கவிதை மட்டும் முடமாகி நின்றது தினப்பொழுதெங்கும் நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு நாயாய் சேவக...
-
எங்கிருந்தும் மழை எனக்கான ஒரு துளி அண்டத்தின் முதல் மவுனம் தாயின் முதல் கரு
1 comment:
Something You made about pachai manithan film right?
Post a Comment