Thursday, May 07, 2009

தேர்தல்...

எங்கெங்கும் தேர்தல் வாசனை
முடிந்தவரை சுவர்களில்
வெள்ளுடைகள் அடங்கிய
சுவரொட்டிகள்...

தெரு முக்கிலெல்லாம்
கைகூப்பி நிற்கிறார்கள்...

தொலைபேசியில் அழைத்து
குசலம் விசாரித்து
கூப்பாடு போடுகிறார்கள்...

எப்பாடு பட்டினும்
வாக்களித்து விடுங்கள்..
இல்லையேல்,
மறுபடியும் பேச
ஆரம்பித்து விடுவார்கள்...
இன்னொரு ஈழம்
கிடைக்காதாவென
தேட ஆரம்பித்துவிடுவார்கள்...

49-0 எல்லாம் வேண்டாம்
எந்த பட்டனை
அழுத்தினாலும் விடை
ஒன்று தான்...

Labels:

2 Comments:

Blogger Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

6:19 AM  
Blogger www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

10:25 AM  

Post a Comment

<< Home