Friday, May 15, 2020

ஆறாயிரம்

அறிமுகம் என்ற சொல்லை, கடந்த 6 மாதங்களில், ஆறாயிரம் முறையாவது சொல்லி இருப்பேன் என நினைக்கிறேன். இப்படியே போனால், என்னை நானே அறிமுகம் செய்து கொண்டு தனியே பேசிக்கொள்வேனோ என்னவோ. அப்படி எதுவும் ஆகாமல் இருக்க, எல்லாம் வல்ல இயற்கை மழை கொண்டு என்னை காப்பாற்றட்டும்.

இதுவும் ஒரு அறிமுகம் பற்றிய கட்டுரை தான். எஸ். ராமகிருஷ்ணன் அவரின் தேசாந்திரி காணொளி வரிசையில் செய்வதெல்லாம் அறிமுகமே. யாவரும் மின்னிதழில் வந்திருந்த அ. முத்துலிங்கம் அவர்களின் நேர்காணலை குறிப்பிடும் போது, எப்பொழுது முத்துலிங்கம் அவர்களின் கட்டுரைகளையோ, நேர்காணலையோ பார்க்கவோ, கேட்கவோ இருக்கும் பட்சத்தில், ஒரு நோட்டு புத்தககத்தை பக்கத்தில் வைத்துக்கொண்டு குறிப்பு எடுத்துக்கொள்வேன் என்கிறார்.

அவருக்கு, அ. முத்துலிங்கம், எனக்கு இப்போது வரை எஸ். ராமகிருஷ்ணனே.

அவரின் இன்றைய காணொளி, நேர்காணலாக அமைந்திருந்தது.



கொட்டிக்கொடுத்தார். இன்னும் பல கேள்விகள் இருக்குமென்று நம்புகிறேன். அடுத்தது வருவதற்குள், என் நோட்டுப்புத்தகத்தை நிரப்பி வைக்கவேண்டும் என்றெண்ணியதாலே, இந்த பதிவு (இதை எப்போதும் பதிவு போட்டு, வெளிச்சத்தில் காட்டியதில்லை. ஆனால், படிக்க சிலர் இருக்கும்போது, இது ஒரு ஆறாயித்தி ஒன்றாக, இன்னொரு அறிமுகமாக இருந்துவிட்டு போகட்டும் என்பதே எண்ணம்.

கீழே கொடுக்கப்பட்ட அத்தனையும் எஸ்ரா அவர்கள் சொன்னது. அதில் ஒன்றைக்கூட நான் படித்ததில்லை. ஆனால், எப்போதாவது படித்து விடவேண்டும். இப்போதுள்ள புத்தகங்களே இன்னும் படித்து முடிக்கப்படவில்லை. அகரமுதல்வன் ஒவ்வொரு குறுநாவலையும் அழகாய் கொண்டுபோய்க்கொண்டிருக்கிறார். இப்போது நான் படிப்பது, உலகின் மிக நீண்ட கழிவறை. இப்பொது வரைக்கும் சித்தப்பா வெகுவாக கவர்த்திருக்கிறார்.

சோர்பா தி கிரீக் (சோர்பா என்னும் கிரேக்கன்)

கட்டவிழ்த்துவிடப்பட்ட மனநிலை கொண்ட சோர்பா என்பது போன்ற ஒரு தோற்றம் எனக்கு கிடைத்தது. பயணம் தொடர்பாக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இரு நண்பர்கள், இல்லை, சூழ்நிலையால் நண்பர்களாக்கப்பட்டவர்கள் போல தெரிகிறது. இது அத்தனையும் தாண்டி, கோவில்பட்டியில் தம் நண்பர்களோடு கூடும் போது போதெல்லாம் சோர்பாவை பற்றி பேசாமல் இருந்ததில்லை என்கிறார். அந்த கோவில்பட்டியில் அப்படி என்னதான் மாயமோ தெரியவில்லை. நைனா, கிரா'வை சொல்லியே ஆக வேண்டும்.

அருண்மொழி நங்கை இந்த நாவலை பற்றி எழுதிய கருத்துக்கள், இங்கே.

கிண்டிலில் சொற்ப விலைக்கு கிடைக்கும் என அமேசான் சொல்கிறது. காகிதபுத்தகமும் சொற்ப விலையே.

கீழ்கண்டவற்றை சிறந்த இந்திய நாவல்கள் என்று சொல்லாமல், தனக்கு பிடித்தவை என்று சொல்லி இருக்கிறார்.

மலையாளத்தில், குர்அதுல் ஐன் ஹைதர் எழுதிய அக்னிநதி. கண்ணுக்கு முன் இருக்கும் சில காலங்களை எழுத்தின் மூலம் கடந்து போகிறது என்று நினைக்கிறேன். ஜெயமோகன் அக்னி நதி பற்றி எழுதிய கருத்துக்கள், இங்கே. இரண்டாயிரத்தி நான்காம் ஆண்டு எழுதிய பதிவில் அக்னிநதி ஒரு முக்கிய படைப்பு என்கிறார். இதே பதிவில், இன்னும் எத்தனையோ இந்திய இலக்கிய படைப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

தாராசங்கர் பந்த்யோபாத்யாய எழுதிய ஆரோக்கிய நிகேதனம் (தமிழில் த. நா. குமாரசாமி), வங்கத்து நாவல். நாவலை பற்றி படிக்கும் போதே இழுக்கிறது. கதைக்களன் தானோ? மரபுக்கும், இக்காலத்திற்கு உள்ள சிக்கலை விளக்கும் போல் இருக்கிறது. ஆனால், கதைக்களன் மருத்துவத்துறை. கடைசி பெஞ்ச் பதிவில், ஆரோக்கிய நிகேதனம் பற்றி, இங்கே.

வங்காளத்து நீலகண்ட பறவை, பலரும் படிக்கச்சொல்லி கேட்டிருக்கிறேன். அதைப்பற்றி ஜெயமோகனின் ஒரு பதிவு.

தகழி சிவசங்கரன் பிள்ளையின், கயிறு மற்றும், செம்மீன்.

கேரளா பூமியில் இருந்து, கேசவதேவ் எழுதிய அயல்கார் (அண்டைவீட்டார்). ஜெயமோகனின் பதிவு இங்கே.

வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய, பால்யகால சகி. அது பற்றி ஒரு பதிவு இங்கே.

தனக்கு மிக நெருக்கமானதாக, வங்கத்து நாவல் சிப்பியின் வயிற்றில் முத்து நாவலை சொல்கிறார். விளக்கத்தில், ஏன் பிடித்தது என்பதற்கான காரணம் கேட்டால் நமக்கும் பிடிக்கிறது. ஒரு அமெரிக்க தாத்தா, தன் கொள்ளுத்தாத்தா இந்தியாவில் வேலை செய்தவர் என்று சொன்னால், எப்படி ஆர்வம் ஈர்க்கும். அப்படி இருக்கும் போலிருக்கிறது. அதை பற்றி எஸ்ராவே எழுதிய பதிவு, இங்கே.

தமிழில் தனக்கு பிடித்த சிறுகதையாக, கு. அழகிரிசாமியின் குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனை குறிப்பிடுகிறார். கிராவின் அண்டைவீட்டார் கு. அழகிரிசாமி. சொல்லும்போது, கரிசல்காட்டின் இன்னொரு எழுத்தாளர் உதயசங்கரை பற்றியும், அவர் அங்கேதான் வேலை செய்தார் என்றும் சொல்லும்போது, ஒரு படைப்பு எங்கெல்லாம் செல்கிறது என்பது வியப்பில் ஆழ்த்துகிறது. இந்த படைப்பையும், படைப்பாளியையும் பற்றி உதயசங்கர் எழுதிய பதிவு.

இதற்கு பிறகு அமெரிக்க இலக்கியங்களை பற்றி ஒரு சிறுகுறிப்பை தூவி இருக்கிறார். அதற்கு ஒரு தனிப்பதிவு தேவைப்படும். அதற்கும் மேலாக, இந்த காணொளியில் அடுத்த பகுதியும் எப்போது வரும் என காத்துக்கொண்டிருக்கிறேன்.

இது வரை இந்த பதிவில் எத்தனை அறிமுகம் என்ற வார்த்தை வந்ததோ தெரியவில்லை. ஆனால், நான் இன்னும் சொன்ன நிலைக்கு போகவில்லை. 



No comments:

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...