Thursday, June 18, 2020

புதை இருட்டு

புதைத்து வைத்திருந்தேன்
யாராவது வந்து எடுத்துக்கொள்ளுங்கள்
அது என் கவிதைக்குள் தான் இருக்கிறது
பொறுமையாய் தேடுங்கள்
கிடைக்கும்
மிக ஆழமாகவே புதைத்திருக்கிறேன்
கொஞ்சம் சுவாசம் தடைபடலாம்
அவ்வளவு இருட்டுக்குள்
ஒளித்து வைத்திருக்கிறேன்
சுலபமில்லை தான்
புதைத்தபோது நானும்
அவஸ்தைப்பட்டேன்
தேடிவிட்டால் சொல்லுங்கள்
நான் புதைத்துவைத்தது
நீங்கள் எடுத்தபோது
எப்படி இருந்தது என்று!!!
காத்திருக்கிறேன்.

1 comment:

Deepa Sundaresan said...

கவி விதைத்த விதையை தேடினேன்...மூச்சு முட்ட, தேடியது கிடைக்கும் முன் திரும்பிவிட்டேன்...

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...