Saturday, June 13, 2020

கருப்பு

இந்த இரவிற்கு தனிப்பெயர் இருந்தது
பெயருக்கேற்ற அழகு
அட்டைக்கரி நிறம்
அள்ள அள்ள அன்பை
தொப்பை நிறைய வைத்திருந்தது
மெல்லிய இசையையும்
கசிந்து கொண்டிருந்தது
கதவுகளைத் தாண்டி
தூங்கும் ஒவ்வொருவரையும்
எழுப்ப முயன்றுகொண்டிருந்தது
சிலர் எழுந்தனர்
கழிவறை சென்றனர்
சிலர் எழவில்லை
அவர்களுக்கு இரவின்
கரிநிறம் பிடிப்பதில்லை
சிலர் கனவுக்குள் பகலை
வரைந்து கொண்டிருந்தனர்
ஒருவன் மட்டும் இப்படி
அல்லாடிக் கொண்டிருந்த
இரவின் ஓட்டத்தை
ரசித்துக்கொண்டிருந்தான்
மூச்சிரைத்தபடி இவனிடம்
கேட்டது
என்னை இப்படி குறுகுறுவென பார்க்காதே!!
நான் வெட்கி பகலாகிவிடுவேன்..
நீ என்னவானாலும் ஆகிப்போ,
ஆனால் நீதான் அன்றொரு நாள்
என் கண்ணீரை வரவழைத்தாய்
முதன்முதல் அழுதேன்!!
உன் கருப்பு நிர்வாணம்
எனக்கான கனத்த ஆடை....

1 comment:

Deepa Sundaresan said...

"வெளியே அழுதால் வெட்கம் என்று விளக்கை அணைத்து அழுதேன்" (வைரமுத்து)

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...