Tuesday, June 09, 2020

நினை

மதிய வெயில் மண்டையை பிளந்தது
வட துருவத்தை நினைத்துக்கொண்டேன்
நாக்கு வறண்டு போனது
மீனை நினைத்துக்கொண்டேன்
தலை சுற்றியது
திருவிழா என்னுள் வந்தது
கண் இருட்டியது
வானத்தை வாங்கிக்கொண்டேன்
நினைவு தப்பித்தது
தொட்டில் பிள்ளை ஆகிக்கொண்டேன்
இதயம் நின்று கொள்ளவா எனக்கேட்டது
இரு,
அம்மாவை நினைத்துக்கொள்கிறேன்

No comments:

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...