Tuesday, June 09, 2020

உதிர்

உதிர்த்துப்போடு என்றான்
எதற்கு என்றேன்
அப்போது தான் உன்னை நீ
உணர முடியும்
சரி, உதிர்த்தேன்
என்னுள் இருந்த குழந்தை
உதிர்ந்தது
ஒரு ஆடவன் உதிர்ந்தான்
பெண் உதிர்ந்தாள்
அடுத்து என்ன...
மாணவன்
பணியாளன்
பொதுப்பணித்துறை அதிகாரி
அப்பா
தாத்தா

முடிந்ததா என கேட்டான்
ஆம், முடிந்தது
இப்போது நீ யார் என்றான்
உன் சீடன் என்றேன்
அதையும் உதிர்த்துப்போடு என்றான்

உதிர்த்தேன்

இப்போது நீ யார் என்றான்
நீ என்றேன்

No comments:

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...