Friday, August 21, 2020

சடம்

 மனசு சரியில்லை 
என்றான் நண்பன் 
எனக்கும் சரியில்லை 
நேற்று அப்பாவிடம் 
சண்டை 
பணம் குறைவாக
இருக்கிறது என்றான் 
என்னிடமும் இல்லை 
மாதக்கடைசி 
நேற்று பூக்கள் 
சரியாக பூக்கவில்லை 
எனக்கும் தான் 
நாளை எனக்கு கல்யாணம் 
அச்சச்சோ 
எனக்கு முன்பே 
கல்யாணம் ஆகிவிட்டதே 
சொல்வது எதையும் 
எனக்காக 
கேட்காத 
சட சென்மங்கள் 

1 comment:

ChellaVidya said...

திறந்தே இருக்கும் செவிகள் நமக்கு மட்டுமே வாய்க்கப்பட்டது போலும்...
நமக்குரிய காதுகள் நம் மனது மட்டுமே போலும்..
அருமை..

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...