Friday, April 16, 2021

விட்டகுறை

 அங்கே தான் முன்னோருமுறை 
சொல் வெளியிட்டு இருந்தேன் 
இப்போது தேடிச்சென்றேன் 
அங்கே இருக்கவில்லை 
எங்கும் போயிருக்க 
வாய்ப்பில்லை 
பிறர் கொள்ளை 
அடித்திருக்கவும் 
வாய்ப்பில்லை 
அவ்வளவு சுரத்தான 
ஒன்றும் இல்லை!!
விட்டது விட்டது தான் 
இனிமேல் சொல்ல ஒன்றுமில்லை 
என்று தான் அவள் 
அந்த இடத்தில் 
சொல்லி விடைபெற்றாள்.
ஒரு சித்தன் தான் 
விடைசொன்னான்.
விட்ட சொல் 
அவளுடையதானது.
இன்னும் ஏந்திக்கொண்டிருக்கிறாள்.

No comments:

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...