Monday, August 16, 2021

புள்ளி

 பிரபஞ்சத்தின் தொடக்கத்தில் நான் 
இருந்தேன் 
புள்ளி எனப்பட்டேன்
விரிந்தேன் 
அண்டம் எனப்பட்டேன் 
இன்னும் விரிந்தேன் 
உலகம் எனப்பட்டேன் 
இன்னும் விரிந்தேன் 
வீடு எனப்பட்டேன் 
விரிந்து கொண்டே இருந்தேன் 
புள்ளி ஆகிவிட்டாய் என்றான் ஒரு குரு 
அது தான் எனக்கு தெரிந்தாகிவிட்டதே 
விரிதலும் சுருங்குதலும் 
தான் வாழ்வு 
மற்றதெல்லாம் எதுவுமாகாத
மகா ஜடங்கள்!!!

1 comment:

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...