Tuesday, August 24, 2021

அமைதி

 பழைய நினைவுகளின் மேய்ப்பன் 
சொன்னான், 
அப்போதெல்லாம் ஒரே நினைவு 
ஒன்றைத்தாண்டிய பின் 
தான் இன்னொரு நினைவு 
பின் செல்லும் 
ஒவ்வொன்றுக்கும் இரை உண்டு 
நின்று நிதானமாக 
புசிக்கும்.
பின் வரும் நினைவுக்கும்
முகமன் கூறும்.

புதிய நினைவுகளின் மேய்ப்பன் 
சொன்னான், 
நான் அத்தனை நினைவுகளையும் 
ஒரு அறைக்குள் அடைப்பேன் 
அவை பெரும் ஓலம் போடும் 
ஒன்றின் ஓலம் இன்னொன்றுக்கு 
தற்கொலை எண்ணம் கொடுக்கும்.
ஒரு கட்டத்தில் 
அனைத்துமே மூர்ச்சை ஆகி 
மரித்துவிடும்.
நான் அடுத்த நினைவு
மாநாட்டுக்கான வேலைகளை 
பார்த்துவிடுவேன்.

பழைய மேய்ப்பன் புதிய மேய்ப்பனிடம் 
சொன்னான்,
உன் கூட்டத்தில் 
என்னையும் சேர்த்துக்கொள்ளேன்.
நினைவுகளின் அமைதி என்னை 
பித்தனாக்குகிறது. 

No comments:

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...