Thursday, August 26, 2021

கலாகாரன்

 எப்பொழுதும் உம்மென்று
இருக்கும் வாய் அவனுக்கு!
இரவின் காதலன்
உரித்துக்கொண்டு 
வெளிவருவான்
நகரத்துக்கே வெளிச்சம் 
பாய்ச்சுவான் 
முகங்களை எல்லாம் 
தன் முகம் கொண்டு 
தழுவுவான் 
விடிவதற்குள் ஒரு அவசரம் 
அசுரனின் வேகத்தில் 
இரவை பருகி முடிப்பான். 
விடியும்.
சாந்தமாகி பலரின் 
காலில் படாமல் இருக்க 
பகலின் இருட்டு தளங்களில் 
உறங்கிக்கிடப்பான். 

No comments:

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...