Monday, August 23, 2021

யாதெனின்

எழுத்தாளன் எனப்படுவான்
இவனெல்லாம்
ஆளன் என்ற விளி உண்டு 
ஆனால் 
இலகுவான வாழ்க்கையை 
வாழத்தகுதி 
இல்லாதவனாக இருப்பான்.
அவனுக்கு இஸ்திரி 
போடக்கூட இந்திரியங்கள் 
உதவாது.

விழிப்பில் கனவில் 
எழுத்தும் வாசிப்பும் 
இருப்பவனுக்கு 
கண் முன் என்ன தெரிந்துவிடும்?

அவனுக்கு தனிக்குணங்கள் உண்டு.

அச்சமில்லாதவன் 
கூக்குரல் எழுப்புவான் 
நினைத்த பொழுது அழுவான் 
சில நிமிடங்கள் 
உள்ளிருக்கும் இதயத்தை 
வெளியெடுத்து ரசிப்பான்
இன்னொரு மனிதனை 
பொறுத்துப்போவான்.
ஆனால் இவை அனைத்தையும் 
மசித்து குழைத்து 
சூடாக்கிய தாளில் 
மட்டும் தான் செய்வான்.

வெளி வாழ்க்கையில் 
அவன் மற்றவனைவரைப் 
போலத்தான்.

வெந்து தணிந்த இட்லிக்குள்
மாவு அப்படியே கிடந்தால் 
தட்டை தூக்கி எறிந்து 
அறம் புரிவான்!!

No comments:

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...