Tuesday, September 14, 2021

கங்கு

 எங்கெங்கு காணினும்
என்னைத் தேடியலைந்தேன்.
கருவில் என்னைக் கேட்டேன்
அது நான் இல்லை
இந்தப்பெண்ணின் ஆங்காரம்
என்றது
பள்ளியில் என்னைக் கேட்டேன்
புத்தக அடுக்கில்
நீ ஒரு காகிதம் என்றது
மணத்தில் என்னைக் கேட்டேன்
காதலின் ஒரு தேய்பிறைத்துளி
என்றது
அலுவலில் என்னைக் கேட்டேன்
முதல் போட்டவனுக்கு
அடிமையானவன் நீ
என்றது
முதுமையில் கேட்டேன்
அமிழ்ந்து கொண்டிருக்கும் 
ஒரு துளி
என்றது
இன்னும் எப்போது தான் நான்
எனக் கேட்டேன்
காத்திரு
என்றது
சிதையில் சிதையும்
முன் கேட்டேன்
உன்னைப் பற்றிய
முதல் கங்கு தான்
நீ
என்றது!!!

No comments:

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...