Friday, September 17, 2021

இறை

 கடவுளின் தொல்லை தாளாமல் 
ஒரு நாள் அவனை 
இருட்டறையில் அடைத்து வைத்தேன்
அந்த நாள் 
இரவெல்லாம் 
ஒரே அழுகை 
அறையே நீரில் 
மூழ்கியது 
அடுத்த நாள் 
மக்கிப்போன வாசம் வந்தது 
திறந்து பார்த்தால் 
இறைவன் எரிந்து கொண்டிருந்தான் 
நேற்றைய தண்ணீரை 
நெருப்பாய் மாற்றி இருப்பான் 
ஆனாலும் வெளியே 
அனுப்ப மனமில்லை 
அனுப்பினால் நடக்கும் 
விபரீதங்கங்களுக்கு 
அவனும் பொறுப்பேற்க 
மாட்டேன் என்கிறான் 
என்னையும் விட்டு விலக 
மாட்டேன் என்கிறான் 
அடுத்த நாள் இரவு 
அங்கிருந்த புகை 
அடங்கிப்போனது 
உள்ளே நறுமணம்
இறைவன் வாசமாகி 
உள்ளேயே நிறைத்து வைத்தான் 
ஆனாலும் வெளியே 
அனுப்ப மனமில்லை 
வெளியே நான் மட்டும் 
சென்றேன் 
சுத்தமாக மிக இலகுவாக 
இருந்தேன் 
அன்றைய இரவு 
அவன் மக்கிப்போன 
குப்பையாகிப் போனான் 
மொத்தத்தில் 
அவனுக்கு பைத்தியம் 
பிடித்துவிட்டது என 
அறிந்து கொண்டேன் 
இனி வெளியே விட்டுவிடலாம் 
குப்பையை யார் 
கண்டுகொள்ளப்போகிறார்கள் 
கொட்டிவிட்டேன் 
ஒரு துறவி தூக்கிச்சுமந்தான்
இமயமலையில் 
கொட்டிவிடுவானாம்
இத்தனை நடந்தும் 
ஒரு வார்த்தை அவன் பேசவில்லை 
இறைவனுக்கு வாய் பேச
வராது என நினைக்கிறேன்.

No comments:

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...