Tuesday, September 14, 2021

மடி

இறந்த பின் 
நான் முன்பிருந்த 
இடத்திற்கெல்லாம் 
சென்று வரலாம் 
என்றொரு வரம் 
கிடைத்தது
ஒவ்வொருவர் மடியிலும் 
ஒரு முறை கிடந்து வந்தேன் 
மனைவியின் மடியில் 
இன்னும் என் வாசம் 
சுற்றிக்கொண்டு இருந்தது 
மகனின் மடியில் 
என் ஒற்றை 
நரை முடி தள்ளாடிக்கொண்டிருந்தது 
தந்தையின் மடியில் 
என் எச்சில் 
உலர்ந்து கிடந்தது 
தாயின் மடியை 
தேடித்தேடி 
அலைந்தேன் 
இன்னொருவன் சொன்னான் 
தாயின் மடி எப்போதும் கிடைக்காது 
அவளுக்கு நிரந்தர வரம் உண்டு 
மகவுகளுக்கு பின் 
திரிந்தலையும் வரம்
உன் பின்னால் தான் இருக்கிறாள் 
பின் பார்த்தால் 
உனக்கு நிறைய நரை முடி 
தலைக்கு எண்ணெய் வெச்சிட்டே இரு 
என்றாள்

No comments:

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...