Wednesday, September 28, 2022

சாமி

ஒவ்வொரு கடவுளிடமும் 
ஒவ்வொரு வார்த்தையை 
காணிக்கை ஆக்குவது என் வழக்கம் 
நிறைய கோவில்கள் 
நிறைய சாமிகள் 
எல்லா வார்த்தைகளும் 
இப்போது சாமிகளின் வயிற்றில் 
கடைசி ஒரு வார்த்தை தான் இருந்தது 
எந்த சாமியும் மிச்சமில்லை 
எனக்கே காணிக்கை ஆக்கினேன் 
அனைத்து சாமிகளும் 
அத்தனை வார்த்தைகளையும் 
என் காலடியில் கொட்டினர் 
நான் சாமியானேன்

No comments:

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...