Wednesday, September 28, 2022

இன்னுமொரு புதிய நிலா

 ஒரு நாள் 
பூமியின் அத்தனை
மனிதரிடமிருந்தும் 
குரல்வளை பிடுங்கப்பட்டது 
ரோஜாக்கள் புதிதாய் பிறந்தன 
இன்னுமொரு புதிய நிலா தோன்றியது 
அலைகள் ஆலோலம் பாடின 
கிளிக்கூட்டம் வெட்டவெளியில் காதல் புரிந்தன
தாள்கள் எல்லாம் புதிய உலகை நோக்கின 
கவி என்று சொன்ன ஒவ்வொருவரும் 
கவிதைகள் எழுதுவதை மறந்தனர் 
இலக்கியம் செழித்து வளர்ந்தது

No comments:

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...