Wednesday, January 19, 2022

அகாலத் தீண்டல்

எங்கோ ஒரு தீண்டலில் விழித்துக்கொள்கிறேன்
இரவை குழிக்குள் தள்ளிவிட்டு
இன்பத்தை நிரப்பிக்கொள்கிறேன்
இன்பமும் தீண்டலும்
தேடவியலா ஒரு முடிவிலியாக
கண்கள் கணம் தாங்க இயலாமல்
இரண்டையும் அகால குழிக்குள்
தள்ளி மண் அள்ளி பூமிக்குள் புதைத்தது
ஏதும் இல்லா தத்துவார்த்தியாக அலைந்தேன்
இரண்டு நாள் பொறுத்து அங்கு ஒரு பூ முளைத்தது
நான் தீண்டலின் பிள்ளை என பிரமாண்டமாய் சிரித்துக்கொண்டது

No comments:

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...