Wednesday, January 19, 2022

அமுக்குணி

கவிதைக்குள் எவரோ ஒருவர் பேசிக்கொண்டே இருக்கின்றனர்
பேசாக்கவிதை உண்டாவென மகாகவியிடம் கேட்டேன்
உண்டென்றான்
என்ன உத்தியில் உழைப்பது?
புத்தியை குப்பையில் போட்டுவிடு
இதயத்தை கழட்டி கோட் ஸ்டாண்டில் கவிழ்த்துவிடு
ஏதும் இல்லா முண்டமான கவியாக இரு
பேசாக்கவிதை பிறக்குமென்றான்
அப்படி ஒரு கவிதையில் சுரத்தே இருக்காதே
ஆனால் அது தான் இந்தக்கால கவிதை
பேசாக்கவிதைகள்
அவனிடமும் பேசாது
இவனிடமும் பேசாது
தன்னிடமும் பேசாது
அமுக்குணியாக உட்கார்ந்திருக்கும்
கேள்வி கேட்டால் அழுகிச்
செத்துவிடும்
மான மரிக்கொழுந்து
அதிகமுள்ளவை அவை

No comments:

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...