Wednesday, January 19, 2022

காதலியின் தந்தை

கவிகள் அனைவரும் நரகம் சென்றனர்
வயிறு முட்ட முட்ட மீல்ஸ் பரிமாரப்பட்டது
ஒவ்வொருவராக கை கழுவினர்
எழுதிய கவி அனைத்தும்
மேகம் வழியே கீழிறங்கி
மழையாய் பொழிந்து
ஒரு காதலனின் காதில் ஒரு சொட்டாய் இறங்கியது
அவன் கவியானான்
அன்பே! உன் பெயருக்கு முன் இனிசியல் வேண்டாம்
பூ என்று வைத்துக்கொள்
அதற்கு பிறந்தவள் தான்
நீ
என முடித்தான்
காதலியின் தந்தை
இந்த கவியையும்
முடித்தான்
மேல் சென்றவன் கைகளும் கழுவப்பட்டது

No comments:

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...