Monday, June 20, 2022

ரூமி

ரூமியிடம் கடன் கேட்டேன்
காதல் தரமாட்டேனென்றான்
மது கேட்டேன்
தீர்ந்து நூற்றாண்டுகள் ஆனதென்றான்
என்னதான் உண்டு
ஒன்றுமில்லை
என் கவிதைகள் உண்டு
அதைக்கொண்டு என் நாவைத்
தடவினேன்
கவிதைகள் புரண்டன
கவிப்புத்தகங்கள் திரண்டுழுந்தன
மொத்தமாய் விற்றுப்போயிற்று
ரூமி இமயமதிற சிரித்தான்
என் கவி உன் நாவில்
ஏறினால்
ஏன் இவ்வளவு பழுப்பேறியுள்ளது
ஒன்றிலும் காதலும் இல்லை
மதுவும் இல்லை
விசுக் விசுக்கென
நின்று நின்று ஓடும்
ஓணான் போல உள்ளதென்றான்
உன் கவிதைகளின் 
இண்டுகளில் சந்தம் சேர்த்தேனென்றேன்
அமைதி நிரப்ப முடியாத உன்னால்
சந்தம் தான் நிரப்ப முடியும்
இரைச்சலோடே இருந்துகொள்
இறந்தபின்னும் சந்தம்
உன்னை அழுத்தாமலிருந்தால்
சரி

No comments:

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...