Monday, June 20, 2022

காற்றில்லாப் பை

சுவாசம் எனக்கென்றாள்
நான் எனக்கென்றேன்
தத்தெடுக்கவா என்றாள்
முடியாது, 
நொடிக்கொருதரம்
அது உள் சென்று
சூல் கொள்ளும்
பின் வருமொன்று
பிள்ளைகளோடு வரும்
அதில் எதை தத்தெடுப்பாய்?
அது தாயுடனே வரும்
அதை தத்தெடுக்கிறேன்
அந்த ஆதிசுவாசம்
எனக்கு வேண்டுமென்ற என் காதலி
இரண்டாண்டு காலம்
சுவாசத்தை உறிஞ்சிக்கொண்டிருந்தாள்
காற்றில்லாப் பையில்
காதல் அடைத்தாள்
பின் மறைந்தாள்
சுவாசமில்லாக் காதல்
இன்னுமொரு காதலிக்காக
காத்திருக்கவில்லை
உதடுகளுக்காக
காத்திருந்தது

No comments:

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...