Sunday, June 05, 2022

கிழமை

எனக்கான ஒரு கிழமை
வேண்டி
கிழமைக்கடவுளிடம்
தபஸ் செய்துகொண்டிருந்தேன்
நாலாயிரம் வருடம் பொறுத்து
என் கண் முன்னே
பிரதிட்டை ஆனார்
கிழமைக்கடவுள்
எனக்கு கிழமைகளை
தானமாக கொடுத்துவிடுகிறேன் என்றார்
மற்றவர்களுக்கு என்ன செய்வீர்கள்
என்றேன்
அவர்களுக்கு கிழமைகள்
தேவையில்லை
அனைவரும் கருந்துளைகளுக்குள்
நிலவின் துணையுடன்
உறங்கிவிட்டனர்
நீ ஒருவன் தான் குகைக்குள்
மிச்சம்
எல்லாம் எடுத்துக்கொள்
என்றான்
இனிமேல் நானெடுத்து
என்ன செய்ய
கிழமைகள் குப்பைக்கு
போயின
நான் கிழமையில்லா
கிழவனானேன்…

No comments:

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...