Sunday, June 05, 2022

குப்பை

நான் எழுதிய அத்தனை
கவிதைகளும் சிறகடித்து
பறந்தன
ஒரு கவிதை மட்டும்
முடமாகி நின்றது
தினப்பொழுதெங்கும்
நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு
நாயாய் சேவகம் செய்தது
சில நாட்கள் சுகம் தான்
பின் பாரமானது
உனக்கு சிறகமைக்கிறேன் என
சொற்களை பிடுங்கி
மாற்றி அமைத்தேன்
நாய் பூனையானதே தவிர
சிறகுகள் வரவில்லை
இருக்கும் சொற்கள் தான் பிரச்சினை
ஒவ்வொன்றாக கழட்டி
குப்பைதொட்டியில் போட்டேன்
கடைசி சொல்
தூக்கி எரிய மனமில்லை
நீதான் இந்தக்கவிதையின் கனம்
உன்னைக்கொண்டு தான்
நான் விரித்தேன்
நீ மட்டும் ஒத்துழை
நான் தூக்கி எரியப்போவதில்லை
ஆனால் அது நீண்ட கால
சொல் நண்பர்களை
விட்டிருக்க முடியாமல்
கைநழுவி குப்பைக்குள்
விழுந்தது
வெறும் வெளி இப்போது
என் கண்ணில் மழை
யுகத்தின் ஏகாதிபத்திய
கவிதை பிறந்தது
அதுவே அனைத்தையும்
ஆண்டது

No comments:

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...