Sunday, June 05, 2022

தனிமை

ஆண்டாண்டு கால 
தனிமையின் முன் 
கால்கட்டி உட்கார்ந்திருந்தேன் 
அங்கே ஒரு பூ
மலரட்டுமா என 
மொட்டு வாய் திறந்தது 
என் தனிமையில் 
ஒரு பூவின் 
மகரந்தம் 
அடர்ந்த இருட்டை 
கவிழ்த்துவிடும் 
இரைச்சலுடன் இருக்கும் 
வேறொரு அறைக்கு 
என் நண்பனிடம் 
அனுப்பி வைத்தேன் 
மலர்ந்த பூ 
அவனுக்கு தியானம் 
சொல்லிக்கொடுத்தது 
தனிமையில் அவனும் 
கிடந்தது அவதிப்பட்டான்

No comments:

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...