Sunday, June 05, 2022

சலனம்

அரண்மனையில் ஒரே குழப்பம்
பரிசில் பெறப்போவது
எந்தக் கவிதை?
அனைத்திலும் சிறந்த கவிதை
பேசாமலேயே இருந்தது
மேலோட்டத்தில் இருந்த ஒன்று
சிறு சலனத்தை மட்டும் காட்டியது
ஒன்றுக்கும் உதவாத கவிதை ஒன்று
ஒவ்வொருவரின் காதுமடல் மயிரின்
மேலேறி கொருகொருவென
பேசிக்கொண்டே இருந்தது
மன்னன் மயிர்க்கவிதைக்கு
பரிசில் அளித்தான்
பிறகென்ன
நவீனக்கவிதை அந்த மன்னனின்
வாயினில் தினமும் கசந்தது!!!

No comments:

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...