Tuesday, December 20, 2022

புனைப்பெயர்

என் கவிதைகளுக்கு
நான் தான் பெயரிட்டிருக்கிறேன்
எனக்கு மட்டும்
நான் பெயரிடவில்லை
இதனால் நானே
ஒரு கவிதையென்றும்
பொருள்படாது
எனக்கு நானே
பெயரிட்டிருந்தால்
புனைப்பெயர் தேடி
ஓடியிருக்க மாட்டேன்

No comments:

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...