Tuesday, December 20, 2022

ஓரிலை

காட்டு வழியில் அவள்
தனித்தென்னை காட்டு மரத்தின்
நடுவே சேர்த்தனைக்கிறாள்
உச்சாணி மரக்கிளையில்
தொட்டனைத்து ஏறியது எங்கள் கிளர்ச்சி
கீழ் இறங்கியதும் அவள் ஓரிலையானாள்
என்னை வேராகச்சொன்னாள்
அவளைப்பார்த்துக்கொண்டே இருக்கும்
மண் படர்ந்த வேரானேன்
வருடங்கள் அலைந்தோடியது
கிழடு தட்டிய வேரானேன்
இளங்காற்று அசைத்ததில்
அவள் கால் இடறி
என் மேல் தான் விழுகிறாள்
வயது தட்டவில்லை
அதே கிளர்ச்சி
இதயம் தான் இல்லை

No comments:

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...